பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழகத்தின் தொன்மைக் குறிப்புக்கள்

௨௨௬

தென் கிழக்கில் தீ (அக்கினி)

ஜாவாவிலிருந்து பிலிப்பைன் தீவுவரையும், இன்றும் பல விடத்தில் எரிமலைகள் எரிந்து கொண்டிருப்பதைத் திணை நூலிற் காண்க.

தெற்கில் கூற்றுவன் (யமன்)

இவனைப்பற்றி முன்னர்க் கூறப்பட்டது. மறத்திற் சிறந்த எருமைக்கடா[1] மறலிக்கு ஊர்தியாகக் கூறப்பட்டது.

தென்மேற்கில் அரக்கன் (திருதி).

தென்னாப்பிரிக்க மக்களையும் பண்டு தமிழகமும் ஆப்பிரிக்காவும் இணைந்திருந்ததையும் நோக்குக.

மேற்கில் வாரணன (வருணன்),

வங்காளக்குடாவிலிருந்த நிலங்கட்கு முந்தி, அரபிக்கடலிலிருந்த நிலம் அமிழ்ந்து போனதால், மேற்கில் வாரணன் குறிக்கப்பட்டான்,

வடமேற்கில் காற்று (வாயு).

இது ஒரு கால் சகாராப் பாலை நிலக் காற்றாயிருக்கலாம்.

வடக்கில் குபேரன்.

இவன் இராவணன் காலத்தவன், இல் விருவரும் முறையே இலங்கையிலிருந்த இயக்கர் (யக்ஷர்), அரக்கர் (ராக்ஷஸர்) என்னும் குலங்கட்குத் தலைவர். இவ்விருவர்க்கும் போர் நிகழ்ந்தது. இராவணன் குபேரனை வென்று அவன் ஊர்தி (புஷ்பக விமானம்) யையும் கவர்ந்து கொண்டான். பின்பு குபேரன் வடதிசைக்குப் போய் ஒரு நாட்டையாண்டான். ஈழத்தில் பொன்னும் மூத்தும் ஏராளமாயகப்பட்டமையின், அவன் ஒரு பெருஞ் செல்வனாய்ப் பல கருவூலங்களை யுடையவனாயிருந்தான்,

வடகிழக்கில் ஈசானன்.

ஈசானன் ஒரு சில வடிவாகக் கூறப்படுகின்றான். இது மலைமகளின் கூறாகக் கருதப்படும் தடாதகைப் பிராட்டி, வடகிழக்குத் திசையிலிருந்த சோமசுந்தரனைக் கலியாணஞ் செய்ததினாலேயே.


  1. 1.All About Animals, pp. 54, 55.