பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௨௮

ஒப்பியன் மொழிநூல்

இதுகாறும் கூறியவற்றால், இந்திய நாகரிகம் தமிழ் நாகரிகமே யென்பதும், "ஆரியர் நாகரிகத்தில் திராவிடராக, திராவிடர் மொழியில் ஆரியரானார்" என்று கில்பெர்ட் சிலேற்றர் (Gilbert Slater) கூறுவது சரியே என்பதும் அறிந்து கொள்க.

நாகர்:

நாகர் என்பார் முதன் முதல் நாக வணக்கங்கொண்டிருந்த கீழ்த்திசை நாட்டார். இன்றும் கீழ் நாடுகள் பாந்தளும் நச்சுப் பாம்பும் நிறைந்தவை.

"கீழ்நில மருங்கினாக நா டாளு
மிருவர் மன்னவர்" (9 : 54, 55)

என்பது மணிமேகலை,

நாகநாட்டு மாந்தரும் அரசரும் நாக இலச்சினையுடை யவராயும், நாகவுருவை அல்லது படத்தைத் தவையிலணிந்த பராயுமிருந்தனர். சிவபெருமான் நாகத்தைத் தலையிலணிந்த தாகக் கூறியது, புல்லிய வணக்கத்தையுடைய நாகரைச் சைவராக்குவதற்குச் சூழ்ந்த சிறந்த வழியே. பௌத்த மதம் பிற்காலத்து வந்தது.

சாவகம் (ஜாவா) நாகநாடென்றும் அதன் தலைநகர் நாகபுரம் என்றும் கூறப்பட்டன, இன்றும் நாகர்கோவில், நாகபட்டினம், நாகூர், நாகபுரம் (Nagpur), சின்ன நாகபுரம் (Cheta Nagpur) முதலிய இடங்கள் இந்தியாவின் கீழ்க்கரையில் அல்லது கீழ்ப்பாகத்திலேயே இருத்தல் காண்க.

அனுமான் கடல் தாண்டும் போது நாகரைக் கண்டா (னென்றும், மைத்நாகமலையில் தங்கினானென்றும், வீமன் துரியோதனனால் கங்கை லமிழ்த்தப்பட்டபின் நாகநாடு சென்றானென்றும், சூரவாதித்த சோழன் கிழக்கே சென்று நாககன்னியை மணந்தாவொன்றும் கூறியிருத்தல் காண்க.

நாகர் அல்லது கீழ்த்திசை நாட்டார் நாகரிகரும் அநாகரிகருமாக இருதிறத்தினர். அநாகரிகர் நக்கவாரம் (Nicobar) முதலிய தீவுகளில் வாழ்பவராயும், அம்மணராயும், தரவூனுண்ணிகளாயு மிருந்தனர்.

"சாதுவனென்போன் தகவில னாகி...
நக்க சாரணர் நாகர் வாழ்மலைப்
பக்கஞ் சார்ந்தவர் பான்மைய னாயினள்...