பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௫௪

ஒப்பியன் மொழிநூல்

"ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்
ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்"

என்பது தொல்காப்பியம் (உரி. 34). ஆய்தம் = நுணுக்கமான ஒலி.

மெய்யெழுத்துக்களில், ழ ள ற ன என்ற நான்கும் முதன் முதல் அரிவரி தோன்றிய காலத்திற்குப் பிற்பட்டவை. அதனாலேயே அவை ஈற்றில் வைக்கப்பட்டன. ல-ள-ழ. ஒலித்தற் கெளிமை கருதி ழகரம் ளகரத்திற்கு. முன் வைக்கப்பட்டது. ர-ற றகரத்திற்கு இனமாக னகரம் தோற்றுவிக்கப்பட்டது. னகரம் தோன்று முன் நகரமே வழங்கிற்று. வெரிந், பொருந், மகிழ்நன், கொழுநன் முதலிய சொற்களை நோக்குக.

எழுத்து படவெழுத்து (Hieroglyphic or Ideographic) அசையெழுத்து (Syllabic), ஒலியெழுத்து (Phonetic) என மூவகைப்படும். உலகில் முதன் முதல் தோன்றினது பட வெழுத்தே. தமிழிலும் அதேயென்பது,

"உருவே யுணர்வே யொலியே தன்மையென
இருவகை யெழுத்து மீரிரண் டாகும்"

என்று யாப்பருங்கல விருத்தியிலும், 'இன்ன பலபல வெழுத்து. நிலைமண்டபம்' என்று பரிபாடலிலும் (19: 53), "கடவுளெழுதிய பாவை" என்று மணிமேகலையிலும் (20: 111) கூறி யிருப்பதாலும், படமெழுதுதல் என்னும் வழக்கு இன்று முண்மையாலும் அறியப்படும்.

திருவாளர் தி. நா. சுப்பிரமணியன் அவர்கள் எழுதி வெளி யிட்டுள்ள பண்டைத் தமிழ் எழுத்துக்கள் என்னும் அரிய ஆராய்ச்சி நூலால், ஒருவகைத் தமிழெழுத்துக்கள் அடைந்து வந்துள்ள மாறுதல்களை நன்றாயறியலாம். தமிழில் இருவகையெழுத்துக்கள் இருந்தன.

சொற்கள்

முதன் முதல் தோன்றினவை தனிச்சொற்களே, குழந்தைகள் சோறு வேண்டும்போது சோறென்று மட்டும் கூறுதல் காண்க.

சொற்கள் இலக்கண முறையில், பெயர் வினை இடை உரி என நான்காக வகுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுள்,