௨௫௬
ஒப்பியன் மொழி நூல்
சொல்லாம் பரத்தலிற் பிங்கல முதலா
எல்லோ ருரிச்சொலி னயந்தனர் கொளலே"
என்றார் பவணந்தியார்.
உரிச்சொல் நிகண்டு என்று ஒரு நிகண்டுமுளது. செய்யுளிற் சிறப்பாக வரும் சொற்களெல்லாம், மாணாக்கர் இளமையிற் பாடஞ் செய்தற் பொருட்டுத் தொகுக்கப் பட்டன. அத்தொகையே நிகண்டென்பது.
இப்போதுள்ள அகராதிக்கு முந்தின நிலை நிகண்டும், அதற்கு முந்தின நிலை உரிச்சொல்லுமாகும்.
(5) உரிச்சொல் செய்யுட் சொல்லேயென்று பண்டைக் --காலத்தில் கூறப்பட்டமை.
“பெரும்பான்மையுஞ் செய்யுட்குரியலாய் வருதலின் உரிச்சொல்லாயிற் றென்பாருமுளர் என்று சேனாவரையர் கூறுதல் காண்க.
பிறவுரை மறுப்பு
1) உரை : இசை குறிப்பு பண்பு என்பவற்றிற் குரியவை உரிச்சொல் என்பது;
மறுப்பு : இது நாற்சொற்கும் பொதுவிலக்கணம் என்பது,
(2) ௨ : பெயர்க்கும் வினைக்கும் உரியது உரிச்சொல் என்பது.
ம: இஃது இடைச்சொற்கும் ஏற்குமென்பது.
(3) உ ; பலபொருட் கொருசொல்லும் ஒரு பொருட்குப் பல சொல்லுமாக உரியது உரிச்சொல் என்பது.
ம : இதுவும் நாற்சொற் பொது விலக்கணம் என்பது.
(4) உ : வினைவேரே உரிச்சொல் என்பது.
ம: வினைவேர் (தாது) ஏவலாகவும் பகுதியாகவும் வினையியலிற் கூறப்பட்டுள்ளது. வினை வேரை வேறாகக்கூறின், இடைவேரையும் வேறாகக் கூறவேண்டும். குரு மாலை முதலிய பெயர்ச்சொற்களும் செல்லல் அலமரல் முதலிய