தமிழிலக்கணத் தோற்றம்
௨௬௩
அம் - அன் - அன்ன-அன்னா : அன்ன - அனை-அனைத்து,
அம்- அங்கு, அம்-- அம்பு-அம்பர்.
அல் - அள்- அண். அம் - அவ், அல்-அன் என்றுங் கூறலாம்.
அல்+து = அன்று. ஒ. நோ. எல்+து = என்று (சூரியன்):
அல் இல் எல் என்னும் வடிவமும் சுட்டுவினாச்சொற்கட் குண்டென்பதை, அன்று இன்று என்று என்னும் தமிழ்ச்சொற்களாலும், அல ஏலா என்னும் தெலுங்குச்சொற்களாலும், அல்லி இல்லி எல்லி என்னும் கன்னடச்சொற்களாலும் உணர்ந்துகொள்க.
அல் என்னும் வடிவமே இல் எனத் திரிந்து, சேய்மைச் சுட்டாக இலத்தீனில் வழங்குகின்றது.
கா:ille -- அவன்illi, illae-அவர்
illa--அவள்illa - அவை
illud-அது
(4) அன் என்பதை ஒருமைக்கும் அம் என்பதைப் பன்மைக்கும் முதலாவது வழங்கினதாகத் தெரிகிறது.
நோக்குக. ஏன், ஏம் : நீன் நீம் : தான், தாம்.
ஈறுகளின் முதலிலுள்ள அசுரம் புணர்ச்சியிற்கெடுதல் இயல்பே.
கா : சிவம்-அன் = சிவன் : மண+அம் = மணம்.
(5) சுட்டடியான உயிர்நெடில்கள் யகரமெய் சேர்ந்து வழங்கியிருக்கின்றன. பின்பு அவ் யகரம் நகரமாக மாறியிருக்கின்றது.
கா : ஏன்-- யான்- நான், ஈ-(யீன்) - நீன். ஆன்-(வான்)-(நான்)- தான்.
இ ஈ எ ஏ இன்றும் சொன்முதலில் வரின், யகரம் சேர்ந்தே பேச்சுவழக்கில் வழங்குகின்றன.::ஒ. மொ.-22