பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௬௨

ஒப்பியன் மொழி நூல்

வடஇந்தியாவில் வழங்கும் இந்தியில் இன்றும் எ ஒ என்னும் தனி நெடில்கள் சுட்டுப் பெயராய் வழங்குகின்றன, அவை முறையே ஈ ஊ என்பவற்றின் திரிபாகும்.

இடையிந்தியாவில் வழங்கும் தெலுங்கில், ஆ ஈ ஏ என்னும் நெடில்கள் புறச்சுட்டுக்களாய் மட்டும் உலகவழக்கில் வழங்குகின்றன; பெயர்களாய் வழங்கவில்லை.

தென்னிந்தியாவில் வழங்கும் தமிழில், அவை புறச்சுட்டாகவும் வழங்கவில்லை. அவற்றுக்குப் பதிலாய் அந்த இந்த எந்த என்ற சொற்களே வழங்குகின்றன. புறச்சுட்டாகவும் புறவினா வாகவும் அவற்றின் குறில்களே வழங்குகின்றன,

இதற்குக் காரணம் வட இந்திய மொழி நிலை பண்படுத்தப் படாது பண்டை நிலையிலேயே இருப்பதும், தென்னிந்திய மொழி பண்படுத்தப்பட்டு மிகுதியும் மாறியிருப்பதுமே,

புதுப்புனைவுசெய்யும் ஒரு நாட்டில் கருவிகள் மாறிக் கொண்டே வரும், அது செய்யாத நாட்டில் அவை என்றும் சற்றுப் பண்டை. நிலையிலேயே யிருக்கும், இந்தியாவிலுள்ள புதுப்புனைவுக் கருவிகளெல்லாம் மேனாட்டினின்றும் வந்தவை, மேனாட்டில் நாள்தோறும் புதுப்புனைவுக்கலை வளர்ந்து கொண்டேயிருப்பதால், கருவிகள் திருத்திக் கொண்டே வருகின்றன. ஆனால், இந்தியாவில், சென்ற நூற்றாண்டுகளிற் கண்டுபிடிக்கப்பட்டு, மேனாட்டில் வழக்கற்றவை யெல்லாம் காணப்படலாம். இங்ஙனமே தென்னாட்டிலும் வட நாட்டிலும் வழங்கும் சொற்களுமென்க.

(2) முதலில் நெடிலாயிருந்த கட்டுவினா வெழுத்துக்கள் பின்பு குறிலாயின.

(3) குறிலும் நெடிலுமான சுட்டுலினா வெழுத்துக்கள் பல ஈறுகளைக் கொண்டிருந்தன,

கா : “ஆம், ஆண், அம், அன், அல், அவ், அண் முதலியன

இவற்றுள் ஆம் அம் என்பவை முந்தினவாகத் தெரிகின்றன

ஆகு—ஆங்கு. ஆண்—ஆண்டு,

அம்—அந்து-அந்த—அந்தா.

அது—அதா—அதோ-அதோள்—அதோனி.