பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புறவுரை கூகூ..


இந்தியா முழுதும் ஆரியத்திற் கிடமாயிருக்கும் போது, இத்தமிழ் நாட்டையாவது ஏன் தமிழுக்கு விடக்கூடாது? தமிழ் இதுபோது அடைந்துள்ள தாழ்நிலையும், இற்றைத் தமிழர் தாய்மொழியுணர்ச்சியில்லாதிருப்பதும், அவரது அடிமை நிலையைச் சிறப்பக் காட்டும். பார்ப்பனரும் அபார்ப்பனரும் இனிமேல் ஒற்றுமையாயிருந்து தமிழைச் சிறப்பாய் வளர்க்கவேண்டும்.

தமிழ் நாட்டுக் கிழார்களும் வேளிரும் மடங்களும், திருப் பனந்தாள் மடத்தைப் பின்பற்றித் தமிழை வளர்த்தால் அது சிறந்தோங்கும்.

புறவுரை

இப்பொத்தகத்திற் கூற விரும்பிய சில செய்திகள் விரி வஞ்சி விடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பிற மடலங் களுள்ளும் பகுதிகளுள்ளும் கண்டுகொள்க.

இங்குக் கூறிய சில சொன் மூலங்கள் மாறலாம். ஆனால் மொழிகளைப் பற்றிய பெரு முடிபுகள் மாறா :

செய்யுது என்னும் தன்மை ஒருமை எதிர்கால வினை முற்றில் உது என்பது ஈறென்றும், முன்மைச் சுட்டாகிய அகாரத்தினின்று நூன் நூம் என்பவை தோன்றின வென்றுங் கொள்ளலாம். இவை புது மாற்றங்களாம்.

"ஒங்க லிடைவந் துயர் ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலி நீர் ஞாலத் திருளகற்று-மாங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ்"

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ
தெங்கும் காணோம்
பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சிசொலப்
பான்மை கெட்டு நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல்
தன்றோ சொல்லீர்
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.
-பாரதியார்