பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரியத்தால் தமிழ் கெட்டமை

55

வடசொற்கலப்பினால் தமிழுக்கு நேர்ந்த தீங்குகளாவன :—

(1) தமிழ்ச்சொற்கள் வழக்கற்று மறைதல்.

(2) தமிழின் தூய்மை கெடல்.

(3) தமிழ்ச்சொற்கள் பொருளிழத்தல்,

குடும்பம், இல், குடி, குலம், வரணம், மரபு என்னும் பெயர்கள், முறையே ஒரு சிறிய அல்லது பெரிய (ஒரு தலை முறையுள்ள அல்லது பல தலை முறை யடங்கின) குடும்பத்தையும், தாய்வழி தந்தைவழிகளையும், கோத்திரத்தையும், ஜாதியையும், நிறம் பற்றிய (வெண்களமர், கருங்களமர், அல்லது ஆரியர், திராவிடர் என்பன போன்ற) பெரும் பிரிவுகளையும், குலவழித்தொடர்பை (descent)யும் குறிப்பனவாகும்.[1] ஆனால், இப்பொருள் வேறுபாடு இன்று எல்லார்க்கும் புலனாவதில்லை,

பசும்பால் என்பது காய்ச்சாத பாலையும், பசிய நிறமான வெள்ளாட்டுப் பாலையும் குறிப்பதாகும். [2]பசுவின் பால் பசுப்பால் என்றே கூறத் தக்கது. பசுப்பாலை ஆவின் பால என் றனர் முன்னோர்.

காட்டு என்னும் தமிழ்ச் சொல்லுக்குப் பதிலாக, உதாரணம் என்னும் வடசொல் வழங்கவே, அது தன் பொருளையிழந்து காண்பி என்னும் பொருளில் வழங்குகின்றது

(4) புதுச்சொற்புனைவின்மை.

தனித்தமிழ் வளர்ந்திருந்தால், ஆஸ்திகம், நாஸ்திகம் என்னும் வடமொழிப் பெயர்களுக்குப் பதிலாக உண்மதம், இன்மதம், அல்லது நம்புமதம், நம்பா மதம் என்பனபோன்ற தென்மொழிப் பெயர்கள் வழங்கியிருக்கும்.


  1. * ஒரு பொருட் பல சொற்கள் பருப்பொருளில் ஒன்றையே குறிப்பினும், நுண் பொருளில் வேறுபட்டவை என்பதை Hand book of the English Tongue என்னும் புத்தகத்தின் 25 ஆம் 26ஆம் பக்கங்களிலும், Hints on the Study of English என்னும் புத்த கத்தின் 49ஆம் 50 ஆம் பக்கங்களிலும் காண்க.
  2. 1. அந்தகக்கவி வீரராகவர் சரித்திரம் காண்க.