பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

vii

மூன்றாம் பதிப்பாகக் கழக வழி வெளிவருகின்றது. இந் நூலாசிரியர்க்குக் கழகத்தின் நன்றி என்றும் உரியது.

இதன் முதற் பதிப்பைப் பெற்றதும் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழ்ப்புரவலர் த, வே. உமாமகேசுரம் பிள்ளையவர்கள் அதைப்பற்றிப் பெரிதும் பாராட்டி எழுதினார்கள்; தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ் நாடு ஆகியவற்றின் வளர்ச்சியினையே குறிக்கோளாகக் கொண்டு சொற்பொழிவாற்றியும் நூல்கள் எழுதியும் அருந்தொண்டு புரிந்த தனித் தமிழ்த் தந்தை மறைத்திரு. மறைமலையடிகளார் அடிச்சுவட்டைப் பற்றி இற்றை நாள் தொண்டு புரிந்து வருபவர் திருவாளர் பாவாணர் அவர்களே யாவர் எனின் அது மிகையாகாது. அடிகளார் வாழ்ந்தபோது திரு: பாவாணர் அவர்கட்கு அன்புள்ளத்தோடு வழங்கிய சான்றிதழ் இதன்கண் சேர்க்கப் பட்டிருக்கிறது.

இதனையும், இதுபோன்ற வரலாற்று இலக்கியங்களையும் கற்றறிந்தோர் ஏற்றுப் போற்றுதல் வேண்டும். அத்துடன் தமிழக அரசும் இத்தகைய நூல்கள் வெளிவரத் துணைபுரிதல் வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.