பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

20 |  ஒரு கவிஞனின் இதயம்

உன்னுடையதுதான். ஒரு மாடு மட்டுமென்ன உனக்குப் பிரியமிருந்தால் இங்குள்ள எல்லா உருப்படிகளையும் ஒட்டிக் கொண்டு செல். என்றிருந்தாலும் இவையெல்லாம் உன்னுடையவைகளே.

    மனோகரனுக்கு உடம்பு தே வலை. அவன் இப்போது செங்காளிபாளையத்தில் எங்களுடன்தான் இருக்கிறான்.
  என் அருமைக் குழந்தையே! உன்னுடைய கடிதத்தில் இரண்டு மூன்று பாடல்களை எழுதியிருக்கிறாய் - பொருள் விளக்கும் படியாக இவையெல்லாம் உனக்கு எதற்கு வேண்டும்? இதை எல்லாம் படித்து வாழ்ந்துதான் என் பிழைப்பு வறுமையும் துக்கமும் நிறைந்ததாகிப் போய்விட்டது. இந்த மாதிரியான வேலைகளில் நீ இனிமேல் தயவு செய்து தலையிட்டுக் கொள்ள வேண்டாம். என்னைப்போல் சோற்றுக்கில்லாது முன்காலத்தில் திண்டாடிக் கொண்டிருந்த பைத்தியம் ஏதோ கிறுக்கிவிட்டுப் போயிருக்கும். விளங்காத பாட்டு விளங்காமலே போகக் கடவதாக
        மற்றபடி யாவும் நலம். மாடு வந்ததும் தெரிவிக்கிறேன்.
                   N.k.இராமசாமி    
        
                           
                                            
                              
                          
  
பி.கு: திருமணமான பின் குடும்பத்தில் சிறுசிறு  
 பூசல்கள். வயது குறைவாக இருந்ததால், அதை சாமார்த்திமாக சமாளிக்க முடியாமல் எழுதிய 

கடிதத்திற்கு வருந்தி எழுதிய பதில்.