பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

55 |  வெள்ளியங்காட்டான் 

                                              |13.12.1960
                                               புளியம்பட்டி

நான் இங்கு நிறையப் படிக்கிறேன்|

அன்புச் செல்வி!

    உன் கார்டு கிடைத்தது. இங்கு அனைவரும் நலம், ஒவ்வொரு நாள் இரவிலும் நான் துங்குவதற்கு முன் உன்னை நினைத்துக் கொள்ளுகிறேன். இது ஒரு வழக்கமாகவே ஆகிவிட்டது. அமைதியான அந்த நிலையில் என் உள்ளம் உன்னை வாழ்த்தத் தொடங்குகிறது. உங்களையெல்லாம் மனமுருகி வாழ்த்துவதில் நான் மகிழ்கிறேன். என்னிடம் இதைக் காட்டிலும் உங்களுக்கு அளிக்கத்தகுந்த நல்லது வேறெதுவுமில்லை. இந்த மாபெரும் உலகத்திற்கு, உங்கள் மூன்று பேரையும் என் குழந்தைகளாகப் பெற்றுக்கொண்டு எல்லாவிதத்திலும் எதிர்காலம் சரியென்று ஒப்புக் கொள்ளத் தக்க மாதிரி வாழ்க்கையை வாழ்ந்து காட்டவே நான் விரும்பினேன். அதில் நான் வெற்றி பெறவில்லை. ஆயினும் வருந்தவேண்டியதுவும் நேரவில்லை.

ஆனால், இன்று நான்