பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



காந்தி . . . .
காந்தி . . . .
காந்தி . . . .
பாபு...பாபு...பாபு...!

நாடு நலம்பெற உழைத்தவர் காந்தி-நாடு வளம் பெற உழைத்தவர் நேரு! நாடு தலைநிமிர அல்லும் பகலும் பாடுபட்டவர் காந்தி-நாடு தலைநிமிர்ந்து நடக்க வழிவகுத்துப் பாதையைச் செப்பனிட்டுக் கொடுத்தவர் நேரு! இங்கே ஒரு மாணவன் காந்தியைப் போலவே வாழ்கிறான். அவரது கொள்கைகளைக் கடைப்பிடித்து ஒரு கல்லூரியையே வழி நடத்திச் செல்கிறான்-தன் வசப்படுத்துகிறான். ஒவ்வொரு மாணவனும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். கடமை-கண்ணியம்- கட்டுப்பாடு-நேர்மை-நீதி நிலைக்கக் காரணமானவர்கள் காந்தி, நேரு, அண்ணா என்பதை உலகறியும்—