பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73


பல கோணல் மாணலான தெருக்களைக் கடந்து சென்று கொண்டிருந்த கார் இறுதியில் கடைத்தெரு முனையிலிருந்த "இந்தர்சந்த்” வட்டிக்கடை முன்பு சென்று நின்றது.

காரிலிருந்து இறங்கிய முதல்வர் மூர்த்தியையும் கூடவே அழைத்துக் கொண்டு கடையினுள் நுழைந்தார். உள்ளே சென்ற மூர்த்தி மார்வாடியின் மேஜைமீது அடுக்கி வைத் திருக்கும் ஹாஸ்டல் பிளேட்டு, ஸ்பூன்களையும் சற்று ஒர மாக மூலையில் காலைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருக் கும் பாபுவின் வீட்டு வேலைக்காரியையும் அவள் பக்கத்திலி ருக்கும் ஒருவனையும், பிரமிப்போடுவைத்த கண் வாங்காமல் பார்த்தான்.

மறுகணம் மூர்த்தி அங்கு அப்படியே மூர்ச்சையாகி விட்டான்.

9 ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

'ஜீவராசிகள் அனைத்திடமும் அன்பு செய்யத் துாண்டுவதே உண்மையான கல்வி. ஆனந்தம் அளிப்பதும் அதுவே.”

-ரஸ்கின்

அன்று விசாரணை தினம். அந்த நாளைத்தான் மூர்த்தி கோஷ்டியினர் தீபாவளியைப்போல் வரவேற்று திருவிழாவைப் போலக் கொண்டாடத் திட்டமிட்டு இருந்த னர். தன்னுடைய நண்பர்களே எல்லாம் கண்டிப்பாக வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்திக் கட்டளை இட்டிருந்தனர்.