பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86


எண்ணியதற்கு மாருக கடந்ததை அவன் மறந்து-மன் னித்து பாபு காட்டிய பரிசுத்தமான அன்பு மூர்த்தியின் இத. யத்தைத் தாக்க வேண்டிய இடத்தில் தாக்கி விட்டது போலும்.

■ நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. சட்டென்று என்கால் களைப் பற்றிக் கொண்டு சார் தயவு செய்து பாபுவை இனி அப்படியொரு காரியத்தை வேறு செய்ய அனுமதித்து விடா திர்கள். முன்னர் நான் செய்த திய காரியங்களும் எண்ணங் களுமே என்னைச் சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றிற்குரிய தண்டனையை இன்னும் நான் அனுபவிக்க ஆரம்பிக்கவில்லை. அது நடை பெறவேண்டும் என்ருன்.

என் நண்பர்களுக்கெல்லாம், நான் எவ்வளவு கெட்ட வன்-கேவலமானவன் என்பது தெரியவேண்டும். அவர்கள் அதற்காக காறித்துப்பிலுைம் ஏற்றுக் கொள்வேனே தவிர மீண்டுமொரு முறை பாபுவை அவமானத்திற்காளாக்க இடம் கொடேன்.

புதன்கிழமை கூட்டத்தில் என் குற்றங்கள் குறைகளை எல்லாம் என் நண்பர்களிடம் எடுத்துக் கூறி விமரிசித்து விடுங்கள். இன்னும் சர்வர் சுப்பையாவைவிட நான் ஆயிரம் மடங்கு தாழ்ந்தவன் என்பதையும் மறவாமல் எடுத்துக் கூறுங்கள் என்று வேண்டிக் கொண்டான்.

மாணவர்களே இங்கு உங்களுக்கு ஒரு சந்தேகம் எழ வாம் பாபுவைவிடக் கேவலமாகத் தன்னை முர்த்தி குறைத்து பேசிக் கொள்ளட்டும்; பரவாயில்லை. திடீரென்று சர்வர் சுப்பையாவின் பெயரை ஏன் மூர்த்தி கூறவேண்டும் என்று தோன்றலாம். காரணம் இதுதான்.

சுப்பையாவைத் தாக்கியதற்காக அவனிடமும் ஹாஸ் டல் ரகளை, சேதம் ஆகியவற்றுக்காக பாபுவிடமும் வார்ட