பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


ஐம்பெரும் விழா




ர்க் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, அனைவரும் ஐயனார் கோவில் மைதானத்தில் குவிந்தார்கள். பஞ்சாயத்து தலைவர் பரமசிவம், கூட்டுறவு சங்கத் தலைவர், கர்ணம், முன்ஸிப், கல்விக்கூட மேனேஜர் உட்பட பல 'பெரிய தலைவர்கள்' கூட்டத்தை எதிர்த்தாற்போல் ஒரு 'கோரம்பாயில்' உட்கார்ந்திருந்தார்கள். காட்டாம்பட்டி என்று அழைக்கப்படும் அந்த ஊரில் ஒரு வழக்கம். ஊரில் உள்ள ஒவ்வொரு குடும்பத் தலைவரும், மாதாமாதம் பத்து ரூபாய் கட்டி, அப்படிச் சேருகிற மொத்த தொகையை ஏலத்தில் விடுவார்கள். ஏலக் 'கழிவு' பொதுப்பணமாகும். இப்படி மாதாமாதம் சேருகிற பொதுப் பணத்தை வருடக் கடைசியில் ஏதாவது ஒரு பொதுக்காரியத்திற்குச் செலவழிப்பார்கள். இந்த ஆண்டு அவனவன் கிட்டத்தட்ட அசல் அளவுக்கே ஏலம் கேட்டிருந்ததால், மூவாயிரம் ரூபாய் தேறியிருந்தது. அந்த மூவாயிரத்தையும் என்னபாடு படுத்தலாம் என்பதை விவாதித்து, முடிவெடுக்கவே 'கூட்டம்' போடப் பட்டிருந்தது.

"இந்த மூவாயிரத்தையும், பழையபடி ஏலம் போடணும்" என்று ஏலத்திலேயே பிழைப்பு நடத்தும் ஒருவர் சத்தம் போட்டார்.

"சீச்சி! அந்த பேச்சை மாத்திட்டு அடுத்தபேச்சைப்