பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

o ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்

31



பிரஸ் என்ற அட்டை ஒட்டிய இடத்தில், மாநில அரசின் வேனில், ஒரு பி.ஆர்.ஒ.வின் மறைமுக உதவியோடு அதிகார சார்பற்ற முறையில் கொண்டு வரப்பட்ட பத்திரிகைக்காரர்கள், டீவிக்காரர்கள, அந்த மூதாட்டியைப் பாய்ந்து, ஆளுக்கொரு பக்கமாகப் பிய்த்தார்கள். அந்த பெருமாட்டியிடம் தனிப்பேட்டி வாங்க வேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் ஒரு வேகம்- பக்த கோடிகளில் பலர், அம்மனின் திருவருள் பெற்ற அந்தக் கிழவியின் காலடியில் தலை போட்டார்கள். அவளும், குறுஞ்சிரிப்பாய் சிரித்தாள்.

இதற்குள், குங்குமம் கேட்டு, பக்தர்கள் பயங்கரமாய் கத்தினார்கள். மூங்கில் வேலிகளை ஒடிக்கப் போனார்கள். முன்னாள் பேரவைத் தலைவர் முனு ஆதி அவர்கள் ஒவ்வொருவருக்கும் குங்குமம் கொடுக்கத்தான் செய்தார். ஆனாலும் திருப்தியில்லை. பீடத்தில் உள்ள ஜெயலலிதா அம்மனின் புகைப்படமே கீழே விழும் அளவிற்கு நெருக்கடி- ஆனாலும், நமது போலீஸார் உடனடியாய் தலையிட்டு, ஒவ்வொருவரையும் கால் வினாடிதரிசனத்துக்கு மட்டுமே அனுமதித்துவிட்டு, அப்புறம் கழுத்தைப் பிடித்துத் தள்ளினார்கள். காவல் துறையினரின் கடும் பணியை மேற்பார்வையிட்ட தேவாரம் அவர்கள், ஒரு திசையில் முகம் போட்டு, முகம் சுழித்துப் பார்த்தார்...ஐம்பது அறுபது கார்கள்...ஜூப்புகள்... மோட்டார் பைக்குகள்; புரடக் கோல்படி பைலட் கார் முன்னாலும், அமைச்சர் கார் பின்னாலும், அப்புறம் அதிகாரிகள் கார்களும் வர வேண்டும்...அப்படித்தான் வந்தன. ஆனால் கோவிலை நெருங்க நெருங்க, சோழவரம் ரேஸ் போல் ஓடின. அமைச்சர் கார்கள் பின்னுக்குத் தள்ளப் பட்டு, ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ்., கார்கள் முன்னால் ஓடின.

எப்படியோ காவல்துறையினர், அமைச்சர்களை கண்டு