பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



30

சு.சமுத்திரம் 0

‘எப்படி எங்கள் பாட்டு' என்பது போல், நமது ஓதுவார்கள், அந்தக் காவிச் சாமியைப் பார்க்க, அது இன்னொன்றையும் ஒப்பித்தது.

ஆங்காரி ஓங்காரி....முத்திகாந்தாமணி! மூவுலகுமான ஜோதி! கொத்துதிரி கோணத்தி மும்மூர்த்திகள் போற்றும் உன்னை, முற்பிறவியில் புண்ணியம் செய்யாதவன், எப்படி துதிக்கமுடியும்?"

கூட்டம் அல்லோலகல்லோலப்பட்டது. அரண் கம்புகள் வழியாய், பொங்கி வழிந்தோடியக் கூட்டத்தில் ஒவ்வொரு வரும் தான் முற்பிறவியில் புண்ணியம் புண்ணியமாய் செய்ததால்தான், இப்பிறவியில் தானைத் தலைவியைத் தரிசித்து, துதிக்க முடிந்தது என்று நம்பினார்கள். அதோடு, தன்னைப் பார்த்துதான், குங்குமம் அதிகமாகக் கொட்டுவதாகவும் எண்ணினார்கள். ஒரு மூதாட்டி, இப்படிப் பேசினாள்.

ஆத்தாவே... ஜெயலலிதா ஆத்தாவே உன் மகிமைய எப்படிம்மா சொல்லுறது? - நேத்து...இந்த பொழுது... இதே நாழிகையில் வந்து ஒன் குங்குமத்தை எடுத்துட்டுப் போய்.. என் புருஷனுக்கு வச்சேன் தாயே.... கண்ணு தெரியாமல்.. திண்ணையில் கிடந்த மனுஷன்...என்னை அடையாளம் கண்டு...அடிக்க வர்ற அளவுக்கு அவருக்கு பார்வை வந்துட்டும்மா... பக்க வாதத்துல கிடந்த என் மகன்...நல்லா நடக்கத் துவங்கிட்டாம்மா..எனக்குதாம்மா இன்னும் போன கண்ணு திரும்ப வர்ல..ஆயிரம் கண்ணுடையாளே! உன் ஒரு கண்ணையாவது எனக்கு கொடும்மா..ஆ...ஊ... அம்மா..நான் என்னசொல்ல...ஏது சொல்ல...இப்போ..இந்த சணத்துல நல்லாவே பாக்கேம்மா..கண்கண்ட ஈஸ்வரி...என் கண்ணத் திறந்துட்ட ...திறந்துட்டேம்மா...'