பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்

29

சர்ச் கான்வென்டைப் புனிதப்படுத்திய சர்வேஸ்வரி! இந்த ஏழையை உன்காலடியில் அண்டவைத்து, என்னை செல்வமழையில் நீராட்டு.பஞ்ச பூத நாயகியே, இந்த பரம ஏழையைப் பாரம்மா..எத்தனை நாளைக்கு, நான் ஏழையாய் இருப்பதம்மா...'

காவிச் சுவாமிகள் கைச்சரக்கை இறுதியில் கலந்து பேசியதைக் கண்ட நவீனத் தமிழ் ஓதுவார்களான சுரதா, காமராசன், இளந்தேவன், புலமைப்பித்தன் போன்றவர்கள், அந்த சுவாமியை, கண்ணாடியில் பார்ப்பது போல் பார்த்து பாடத் துவங்கினார்கள் - அதுவும் குன்னக்குடி வைத்திய நாதனின் இசையமைப்பு என்றால் கேட்க வேண்டுமா.. ஜெயலலிதா பிள்ளைத் தமிழ் - ஜெயலலிதா திருப்பள்ளி எழுச்சி-ஜெயலலிதா அந்தாதி- ஜெயலலிதா அனுபூதி...

இவையல்லாது, அவர்கள் தனிப்பாடலாகவும் பாடினார்கள்.

                   'வாரியம் தருபவளே! 
                    போற்றி! போற்றி!! 
                    வாக்கை மதிப்பவளே! 
                    போற்றி! போற்றி!! 
                    ஆஸ்தானம் தரும் அம்மா
                                     போற்றி!! 
                    சொல்தானம் தருகிற
                                     அடியார்க்கு 
                    பொருள்தானம் தருகின்ற 
                    புண்ணியமே போற்றி!
                                     போற்றி!”