பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



o ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்

33

விஐபி அறையில் விட்டுவிட்டு ஒதுங்கிக் கொண்டார்.

சேடப்பட்டியார், அமைச்சகக் கூட்டத்திற்கு தானே தலைவர் என்பது போல் பேசப் போன போது, எஸ்.டி.எஸ்., 'ஒன்னை இங்கே சேர்த்ததே பெரிசு என்பது போல், அவரை அமீனா மாதிரி பார்த்துவிட்டுப் பேசினார்.

முப்பது முக்கோடி தேவர்களுக்கும், நாற்பது நாற்கோடி முனிவர்களுக்கும் மேலானவர்கள் மும்மூர்த்திகள். இந்த மும்மூர்த்திகளுக்கும் மேற்ப்பட்டது சதாசிவமான பிரும்மம். இந்த பிரும்மத்தையும் படைப்பது பரப்பிரும்மம்... நமது புரட்சித் தலைவிதான், இந்த பரப்பிரும்மம் என்பது இப்போது நிரூபணமாகிவிட்டது. ஆகையால், நமது கட்டிடக் கலை வரலாறு காணாத வகையில், நம் அம்மனுக்கு திருக்கோயில் எடுக்க வேண்டும். அந்தக் கோவிலும்...'

மாண்புமிகு கண்ணப்பன் அவர்கள், எஸ்.டி.எஸ்ஸுக்கு கடுப்பேற்றி இடைச் செறுகலாய் பேசினார்.

'கால்பட்ட உடனே கல்லும் மலராகும் காவல் தெய்வத்திற்கு நாம் கட்டும் கோவில், தஞ்சை பெரிய கோவிலை விடப் பெரிதாக இருக்க வேண்டும். அங்கே வானளாவிய கோயில் நிழல் எப்படிக் கீழே விழ வில்லையோ அப்படி இங்கேயும் விழப்படாது... அங்கே உச்சியில் பொருத்திய கோள வடிவமான சிகரப் பெருங்கல்லைவிட பெரியதாகவும், அழகாகவும் ஒரு கல்லை உருவாக்க வேண்டும். அதோடு அம்மாவின் ஆலயம், ராமேஸ்வரம் கோவில் பிரகாரங்களைவிட கூடுதலாய், மதுரை மீனாட்சிக்கு கிடைத்த கோபுரங் களைவிட அதிகமாய் இருக்க வேண்டும். உலகளாவிய அளவில், இதற்கு டெண்டர் வாங்க வேண்டும்.'