பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



36

சு.சமுத்திரம் 0

அவரா தட்சிணாமூர்த்தி-அய்யகோ

முகவை மாவட்ட சத்தியமூர்த்தி சப்போர்ட் செய்தார்.

'இதனால் ஆகம விதியும் மீறப் படவில்லை. எங்கள் மாவட்டத்தில் உள்ள உத்திரகோச மங்கை என்ற திருத்தலத் தில், நம் சர்வேஸ்வரி, தனது முந்தைய குழல் வாய் மொழி அவதாரத்தில், பிரணவ மந்திரத்தை சிவனால் உபதேசிக்கப் பட்டார். இப்போதைய ஜெயலலிதா அவதாரத்தில், குருவுக்கு மிஞ்சிய சிஷ்யை ஆகிவிட்டார். ஆகவே தட்சிணாமூர்த்தி தேவையில்லை.

கூட்டுறவு அமைச்சரான பட்டாபிராமன், ஒரு கேள்வியைக் கேட்டார்.

'சின்னம்மாவையாவது-துர்க்கா தேவியாய்...

தேவையில்லை. இருவருமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். உண்மையில், கருவறையில் இருவருமே இருமுக நாயகியர்-முகம் காட்டி அருள் பாலிப்பவர் 'அம்மா-திருமுகம் காட்டமலே திருவருள் செய்பவர் சின்னம்மா-இருவரும் தத்தம் ஆக்கல், அழித்தல், காத்தல் செயல்களை செவ்வனே செய்கிறார்கள்."

எஸ். டி. எஸ். அவர்கள், எல்லாம் தெரிந்தவர் போல் பதிலளித்தாலும், அவருக்கும் உள்ளூர உதைப்பு- சின்னம் மாவை இருட்டடிப்பு செய்துவிட்டதாய் எவரும் கோள் சொல்லக்கூடாதே என்ற முன்னெச்சரிக்கை-ஒரு பக்கமாய் தூங்கிக் கொண்டிருந்த நாவலரை உசுப்பி, நீங்க-என்ன நினைக்கீங்க' என்றார். அவரோ-அந்த நடமாடும் பல்கலைக் கழகம், இப்படி பதிலளித்தது.