பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26   ✲   ராதை சிரித்தாள்

வல்லிக்கண்ணன்


வென்று சிரித்தாள் ராதை.

சிவராமன் அவளையே பார்த்தான். அவனுக்கும் சிரிப்பு வந்தது. சிரித்தபடி 'சரி போய்வாறேன்' என்று சொல்லி தெருவில் இறங்கினான்.

'போனதும் காயிதம் போட வேண்டாம். ஒரு வாரத்திலே நானே வந்து சேருவேன்' என்று சொல்லி வாசல்படி வரை வந்து சிரித்து வழியனுப்பினாள் ராதை.

ரயிலேறிய பிறகு கூட அவளது சிரிப்பின் ரீங்காரம் அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.