பக்கம்:ஒலிம்பிக் பந்தயத்தின் கதை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இவ்வாறு ஒலிம்பிக் பந்தயம் உண்டானதன் காரணத்தை பல்வேறு கதைகள், புராணங்கள் பல டக் கூறுகின்றன என்ருலும். நம் கண் முன்னே காணு கின்ற ஒலிம்பிக் பந்தயம் போலவே. அந்நாளில் சிறப்பாக, கொண்டாடப்பெற்றிருக்கின்றன என்பதற்கும் ஆதாரங்கல், நிறைய உள்ளன.

கிரேக்கர்கள், நாகரீகம் மிகுந்தவர்களாக வாழ்ந்த, போதிலும், சிந்தையிலே தெய்வ பக்தி நிறைந்தவர்களாகவே வாழ்ந்திருக்கிருர்கள். தெய்வம் போற்றி. சுவை மணம் மிகுந்தப் பொருட்களப் படைக்கும் நம்மவர் பழக்கத்திற்கு பதிலாக, விளையாட்டுப் பந்தயங்களை விமரிசையாக நடத்தி வந்தனர். ஆண்டவன் பேரால் மட்டுமல்ல ஆண் மையுள்ள விரனின் வெற்றித் திரு நாளிலும். வீர மரணம் எய்திய பெருநாளிலும் கூட, பந்தயங்கள் நடந்திருக்கின்றன.

ஆரம்ப நாட்களில், ஒலிம்பிக் பந்தயங்களே "பிசா நாட்டினர் மட்டுமே நடத்தி வந்தனர்; ஏனெனில், தொடக்கத்திற்கான தகுந்த கதையின் கருவே அந் நகரில் தானே அமைந்து இருக்கிறது. ஆண்டுகள் செல்லச் செல்ல. அந் நாட்டின் அருகாமையில் வாழ்ந்த "எல்லி ஸ்" நகர மக்கள் அவர்களுக்குத் துணை போயினர். சேர்ந்து பந்தயங்களை நடத்தினர். பந்தயத்தின் மகிமை பெருகப் பெருக ஸ்பார்டா எனும் நாட்டினரும பங்கு பெற்றனர். இவ்வாருக. ஒலிம்பிக் பந்தயங்களில் உள்ளம் ஈடுபட்ட நாட்டினர் அகன வரும் ஒன்று சேர்ந்து. போட்டிகளில் கலந்து கொண்டனர். ஆணுல், பங்கு பெறுவோர் அனைவரும் கிரேக்க நாட்டினராகத்தான் இருக்க வேண்டுமென்ற கட்டாய விதியும் கூடவே இருந்தது. கட்டாயமாகவே, தொடர்ந்தும் வந்தது.

நாடுகளுக்குள்ளே எழுந்த போட்டி மனப்பான்மையும். தலேமைத் தன்மையும். பந்தயம் நடககவும்.பலமான உடல்.