பக்கம்:ஔவையார் கதை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

ஒளவையார் கதை


பெருஞ்சேர லிரும்பொறை என்பான்
பெருவீரன் சேரன் தன்னை
அருந்துணை வேண்டி கின்றான்
அவனதற் கிசைந்து கொண்டான்
சேரனும் காரிமன் னவனும்
சேர்ந்துவல் வில்லோரி தன்னைப்
போரினில் எதிர்த்திட லானர்
பொருப்பினைப் பற்றவே போனார்
ஒரியும் போர்த்துணை வேண்டி
உற்றனன் அதியமான் தன்னை
போரினில் விருப்புற்ற அன்னான்
போர்த்துணை மன்னரை அழைத்தார்
நண்பராம் சோழபாண் டியரை
நல்லதுணை யாகவே பெற்றார்
வன்பொடு போர்புரிந் திட்டார்
வல்வில் லோரியின் நட்டார்
நால்வரையும் வென்று விரட்டி
நற்கொல்லி மலையினைப் பற்றி
வேல்வீரர் சேரனும் காரி
வேந்தனும் வெற்றியைக் கண்டார்
தோற்றிட்ட அதியமான் அஞ்சி
தோய்ந்ததக டுர்மதில் சேர்ந்தான்
மாற்றலர்க் கஞ்சியக் கோட்டை
மதிலடைத் துள்ளே யிருந்தான்
வென்றிட்ட மலையமான் சேரன்
வேந்தர்கள் கோட்டையைச் சூழ்ந்தார்
துன்றிட்ட அதியமான் தோன்றல்
தோல்விநிச் சயமென்று கண்டான்
மதில்சூழ்ந்த பகைவரை மன்னன்
மலையாது வாளா விருந்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஔவையார்_கதை.pdf/24&oldid=507914" இலிருந்து மீள்விக்கப்பட்டது