பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

ஔவையார் தனிப்பாடல்கள்


அலைகொண்ட வேற்கரத் தைவே லசதி அணிவரைமேல்
நிலைகொண்ட மங்கைதன் கொங்கைக்குத் தோற்றின
நீரினங்கள்
குலையுண் டிடியுண்டென் கையினி லெற்றுண்டு
குட்டுமுண்டு
விலையுண் டடியுண்டு கண்ணிர் ததும்பவும்
வெட்டுண்டவே.

“ஐவேலசதியின் கையிடத்து வேல் பகைவரை நோக்கி அசைந்து கொண்டிருக்கும் தன்மையும் கொண்டது. அவனுடைய அழகிய மலை மேல் குடியிருப்பினைக் கொண்ட மங்கை நல்லாள் என் காதலி. இந்த இளநீர்க் காய்கள் அவளுடைய கொங்கைகளின் உருவ எழிலுக்கு ஒப்பாகாமல் தோற்றுப் போயின. அதனால்தான் தம் நிலைகுலைந்து, தம்முள் இடியுண்டு, என் கையால் எற்றும் உண்டன. பின் குட்டுதலையும் பெற்று, விலை கூறலையும் பெற்று, அடிகளையும் பெற்றுக் கண்ணிர் ததும்புமாறு வெட்டுண்டும் போயின" என்பது பொருள்.

வேல் அலைகொள்ளல், பகைவரை நோக்கிச் செலுத்தப் படும் போது, நிலைகொண்ட மங்கை என்றது நிலையான காதல் கொண்டவளையும் குறிப்பிடும். 'விலையுண்டு' என்றது, அவன் அக் காய்களை விலைக்குப் பெற்றுதான் குடித்ததனையும் காட்டும்.

95. கோதினள்!

ரு மங்கை நல்லாள் தன்னுடைய மாளிகையின் நிலா முற்றத்திலிருந்து தன்னுடைய தலைமயிரைக் கோதிக் கொண்டிருக்கின்றாள். தெருவூடே சென்று கொண்டிருந்த ஒருவன் அந்தக் காட்சியைக் கண்டான். அவளுடைய அழகிலும், அவள் மயிர் கோதுகின்ற அந்த நளினத்திலும் தன் மனத்தைப் பறி கொடுத்தான். அவன் சொல்வதுபோல அமைந்த செய்யுள் இது.

அழற்கட்டுக் கட்டிய வைவே லசதி யணிவரையின்
மழைக்கட்டுக் கட்டிய மாளிகை மேலொரு மங்கை
நல்லாள்
உழக்கிட் டுரியிட்டு முவ்வழக் கிட்டுரி நாழியிட்டுக்
குழற்கட் டவிழ்த்துட னங்ஙனின் றேமயிர் கோதினளே.

ஐவேலசதியின் மலை நாட்டில் கொடு விலங்குகளும் உள்ளன. ஆதலால் எப்புறமும் நெருப்பிட்டுக் காவல் செய்திருப்பார்கள். இப்படி அழற்கட்டுடன் விளங்குவது அவனுடைய அழகிய மலை.