பக்கம்:கடல் முத்து.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罩2念 கடல் முத்து மலர்க் கூந்தற் குமரி பாண்டியன் மகள் செயலிழந்தாள். சிவசக்தி சிந்தித்தாள். "தேவி, பூலோகம் வர வர உருப்படாமல் போய்க் கொண்டிருக்கிறது. பார்த்தாயா, அந்தப் பச்சை மண்ணே? கேட்டாயா, அதன் தீனக்குரலை? குவா, குவா’ என்று கதறி அழும் அதன் வேதனையிலே, தெய்வமே, தெய்வமே!’’ என்ற எதிரொலி கேட்கிறதே? பாவம்! ... படைப்பு புதிர் என்று சொல்லுகிரு.ர்கள் மண்ணிலே. ஆனால், அவர்களே படைப்பைப் புதிராக்கி, அத் து ட ன் வாழ்க்கையையும் புதிராக்கிக்கொண்டுவிடுகிருர்கள்; அது மட்டுமா? நீயும் நானும்கூடத்தான் அந்தப் புதிர்ப்பிணைப்பில் இணைக்கப் பட்டுப் பேசப்படுகின்ருேம். விந்தைமிகு மக்கள்-மக்களா? மாக்கள்!" பிறை சூடியின் குரலில் எரிமலை கனன்றது. 'அன்பரே, உங்கள் வாய்மொழி முற்றும் உண்மை. கடந்த பத்து நாழிப் பொழுதாக நான் உறக்கம்கொள்ள வில்லை. முதற் குரல் எதிரொலித்தது-திடுக்கிட்டு விழித் தேன். சிசுவின் வினைப்பயன் அப்படியோ? பாவம், பிறந்த குழந்தை பிறந்த மண்ணில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. அதோ, பொழுது புலர்ந்துவிட்டது. காட்டுவழி நடப்பவர்கள் ஓடோடி வருகிருர்கள்; குழந்தையைப் பார்க்கிருர்களே! ஆ. என்ன கொடுமை? ஐயோ. அவர்கள் எல்லோரும் போய் விட்டார்களே, மதலையை மறந்து...! ஒரு சொட்டுக் கண்ணிருக்குக்கூடப் பஞ்சமாகிவிட்டதே? சே, பாழ் உலகம்! இதயமிழந்த பாவிகள்!" - இமயவல்லியின் இமைபாவா விழிகளிலே கோபம் கொந்தளித்தது. 'உமையவளே! சினம் தவிர். பூலோகம் விசித்திர மானது-அது நம் இருவருக்கும் புரியாததல்லவே? குழந்தை யைக் கண்டவர்கள் வறிதே சென்ருர்களல்லவா? அப்போது, அவர்கள் உதடுகள் உதிர்த்தத் தீர்ப்பை மறுமுறையும் நினைத்துப்பார்: 'ம். . . யார் பெற்ற குழந்தையோ? நமக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/131&oldid=764978" இலிருந்து மீள்விக்கப்பட்டது