பக்கம்:கடல் முத்து.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைக்கலி 135 இதயமுள்ள யாரோ ஒரு செம்படவன் வந்தான்: குழந்தையைப் பார்த்தான்; அவனுடைய கண்ணிர்த்துளிகள் பேசும் பொற்சித்திரத்தைக் குளிப்பாட்டின. 'குழந்தை! மேலுலகத்துப் பாரிஜாதப் பூ ஆண்டவனே உன் மகிமையே மகிமை. எங்கள் பிள்ளைக்கவி திர்ந்துவிட்டது!’ என்று ஆனந்தக் குரலைத் திக்கெட்டும் திசைபிரித்துவிட்ட வண்ணம், சேயும் கையுமாகப் பறந்தான். முக்கண்ணி சிரித்தாள்! முக்கண்ணன் சிரித்தான்! பாரிஜாதம் சிரித்தது! இருட்டு-மை இருட்டு. வண்ணக் களஞ்சியத்தை வாரியணைத்துக் கொஞ்சி மகிழ்ந்தவாறு வாசலில் அமர்ந்திருந்தான் அந்தச் செம்பட வன். மெய்ம்மறந்திருந்தாள் அவனுடைய மனையாட்டி. "அண்ணே, அண்ணே! ஒடியா, ஒடியா! பாவம், யாரோ ஒரு பொம்பளை காட்டாத்திலே விழுந்திட்டா. நாங்க படகிலே காப்பாத்தினேம். பொளைக்கிருளோ, என்னமோ, சங்கிலிக் கருப்பனுக்குத்தான் தெரியும்!” அந்தப் பெண் மெல்ல மெல்லக் கண் திறந்தாள். கண்ணிர் வெள்ளம் புரண்டோடியது. அவள் கதறினுள்" "கடவுளே! நான் செஞ்ச குற்றத்துக்கா என் குழந்தையை என்கிட்டேயிருந்து பிரிச்சே? என்ன ஆசைகாட்டி மோசஞ் செஞ்சவனேக் கொன்னுப்பிட்டு, என் குழந்தைக்காக ஒடோடி வந்தேனே...! பெற்ற வயிறு துடிச்சுச் சாகுதே? ஐயோ, என் ஆருயிர்ச் செல்வமே, இனி உன்னை எப்பிறப்பிலே கண்ணுலே காணப் போறேனே?...என்னை மன்னிச்சிட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/134&oldid=764981" இலிருந்து மீள்விக்கப்பட்டது