பக்கம்:கடல் முத்து.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிர் குழந்தை வீறிட்டு அழுதது; அழுகை சப்தம் கேட்டு விழித்தெழுந்த காவேரி மகளுக்குப் பால் கொடுத்துவிட்டுத் திரும்பிள்ை, உச்சிப்பொழுதாகியிருந்தது. தன் மச்சானே ஒருதரம் ஏறிட்டுப் பார்த்தாள். வேலன் சுரனே தவறிய தூக்கத்தில் கிடந்தான். நாலு நாளாக அடித்த காய்ச்சல் அன்றைக்குத்தான் ஒரு மாதிரி தணிந்திருந்தது. 'மரம் வச்சவன் தண்ணி ஊத்தமாட்டானன்னு சும்மா குந்திக்கிட்டு இருந்தாச் சோறு எப்படிக் கிடைக்கும்? நாலு வீடு தேடிப்போன எந்த மவராசியாச்சும் மனசு இளகி பிடி சோறு போடாமலா போயிடுவாக? ஆன. மச்சானுக்கு உடம்பு காயலா இல்லாட்டி வழக்கம்போலப் பிச்சைக்குப் புறப்பட்டிருக்கலாமே. இம்மா நேரத்துக்கு, வயத்துப் பாட்டுக்கும் திறமாக் கிடைச்சிருக்குமே இந்த ரீதியில் அவள் மனத்து எண்ண்ங்கள் சங்கிலிக் கோர்வை பின்னின. - . . - அவள் பிச்சைக்காரி. வேலன் அவளுடைய கணவன். தம்பதிகளின் வாழ்க்கைச் சுவடு குழந்தை. இந்த மூன்று நபர்களும் வறுமைப் பறையறிவிப்பின் வஞ்சனைக்குள்ளான தரித்திர நாராயணர்கள்; யாரோ சொல்லியிருக்கிருரே அது மாதிரி அவர்கள் தெய்வக் குழந்தைகள்! ஆம்; சிருஷ்டிச் சிக்கலுக்கு எடுத்துக்காட்டு: . . . . . வேலன் கபோதி. வாழ்வின் ஒளி வளர்பின்றங்ாகப் பரிணமிக்க வேண்டிய பருவம்; என்ருே ஒளி கிறுக்கிப் .பாய்ந்த மின்னல் அவனது பார்வையைப் பறித்துக்:சென்று விட்டது. அவன் துடித்துப் போனன்; காவேரி, திலை குலைந்தாள். . . . . . . . . وي دي :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/48&oldid=765020" இலிருந்து மீள்விக்கப்பட்டது