பக்கம்:கடல் முத்து.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§4. கடல் முத்து காளிக்கு இவ்வுலக எண்ணமே கிடையாதுபோலும். அவன் தன்னையும் மறந்து சிரித்தான். ஆமாம்; அவள் உருவிலே அவன் தன் சொந்தத் தங்கச்சி நடமாடுவதை, அழகு காட்டி விளையாடுவதைக் கண் மூடாமல் பார்த்து தின்ருன்! குமாரசாமி கையில் பழங்களுடன் பிரவேசித்தான். வழியில் நின்ற காளியைக் கண்டுவிட்டு, காளி, வாப்பா' என்று முகமன் கூறிஞன். காளி அப்போதுதான் உணர்வு பெற்ருன். தமையன் வந்ததும் ஒதுங்கி நின்ற அப்பெண் சாமான் களே உள்ளெடுத்துப் போளுள். "ஐயா, கொஞ்சம் தாகத்துக்கு வேணும் என்ருன் காளி. உண்மையில் அவனுக்குத் தாகமில்லை. ஆளுல் அவள் கையால் ஒரு மிடறு தண்ணிரேனும் அருந்தவேண்டுமென் நிருந்தது அவனுக்கு. தண்ணிர், செம்பில் கொணர்ந்தாள் மங்கை. அவள் நீட்டிய செம்பைக் கை நீட்டி வாங்கின காளியின் விரல்கள் அவளது பூங்கரங்களைத் தீண்டின. அவன் புளகித் தான்; பூரித்தான்; பாச வெள்ளம் கரைபுரண்டது. தன் தங்கச்சியுடன் கழித்த அந்த நாட்கள் மனதில் நிழலாடின. அவன் அவளே உவகையுடன் சிருஷ்டி செலுத்தினன். ஆளுல் பதிலுக்கு அவள் விழித்த நோக்கிலே ஏன் இத்தகைய புயல்? சூருவளி? துவண்டு மறையும் மின்னலென அவள் மறைந்தாள். 'அண்ணுச்சி. - ஏககாலத்தில் குமாரசாமியும் காளியும் திரும்பினர்கள். குமாரசாமி மட்டுமே உள்ளே நுழைந்தான். காளி ஏக்க முற்றுச் சிலையாளுன். தங்கச்சி."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/73&oldid=765048" இலிருந்து மீள்விக்கப்பட்டது