பக்கம்:கடல் முத்து.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏய் காளி 霸莎 காளி மனதிற்குள் அழைத்துக்கொண்டான். அவன் நிலைப்படியைத் தாண்டி நின்ருள்: சேலை தரையில் மிதந்து கிடந்தது. பார்வையைத் திசை விலக்கிவிட்டாள். 'அண்ணுச்சி. யாரு அந்த மனுசன். அப்பவே தொட்டு என்னையே விழுங்கிப்பிடுகிறவர் கணக்காப் பார்த்துக்கிட்டே இருக்காரு. அந்த ஆளு பைத்தியமாங்காட்டியும்-?" அந்த வார்த்தைகள் காளிக்குத் தெளிவாகக் கேட்டன. அந்தப் பெண்தான் பேசிள்ை. - சுரீர் சுரீர்” என்று அவ்வார்த்தைகள் ஒவ்வொன்றும் கூரிய அம்பாகப் பாய்ந்தன அவன் உடல், உள்ளம் இரண் டிலுமாக. எய்தவனிருக்க அம்பை நோவதா? அம்பைசொல் அம்பை எய்தது அந்தத் தங்கச்சி’யாயிற்றே? உடன் பிறக்காவிட்டாலும் உடன் பிறந்ததாகப் பாசம் சொரிந் தானே அவன்? காளி அன்பு காட்டினன். அவளோ பழி காட்டிவிட் டாள். பேதை! அன்பும் பழியும் துருவங்களின் இரு மாறு பட்ட புள்ளி மையங்களல்லவா? இந்த இரண்டு உள்ளங் களும் எங்கனம் ஒன்றுசேர முடியும்? அவன் பிணைத்து இணைக்கப் பார்த்தான். அவள் அபவாதம் சொல்லிவிட் டாளே! எண்ணெயும் தண்ணீரும் ஒன்றுகலக்க முடியுமா, என்ன? அந்த யுவதி எய்த அம்பு காளியைத் துளைத்துக்கொண் டிருந்தது. புண் ரணமாயிற்று. கணத்தில் மீண்டும் அம்பு வீச்சு. ஐயையோ! அவன் துடித்தான், கரையில் விதி யெறிந்த மீனைப்போல. தங்கச்சி.” கண்ணிர் வெள்ளம், வெந்து புரையோடிய நெஞ்சு, உயிர் ஊசலாடிய உடல்; இந்நிலையிலும் காளி அவளை மறக்க வில்லை. ... துள்ளியோடும் ஆற்று நீரின் மேல்பரப்பு அழகாகசலனமற்றுத்தானே தோன்றுகின்றது. ஆனால் நீரின் அடிப் பரப்பிலே சுழித்தோடும் சுழல் யாருக்குப் புலப்படும்? 3 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/74&oldid=765049" இலிருந்து மீள்விக்கப்பட்டது