பக்கம்:கடல் முத்து.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவிலே வாழ்வு 75 சித்தமாயிருந்தான். தங்கையைப்பற்றி நினைத்த மாத்தி ரத்தில் அவன் மனதில் உற்சாகம் நிரம்பி வழியும். புது வருசப் பிறப்புக்குத் தங்கையை அழைத்துவர எண்ண மிட்டான். சந்தைக்குப்போய்த் திரும்பிய களைப்பில் சாப் பிட்டு முடித்து வெற்றிலே போட்டுக்கொள்ள வாசலுக்கு வந்தான். அவனுடன் கையில் வெற்றிலைக் கொட்டான்' சகிதம் அவன் தாயும் வந்தாள். "நாளை விடிஞ்சதுமா மச்சான் கிட்டப் போய்ச் சொல் லிப் புது வருசப் பிறப்புக்கு வரச் சொல்லிப்பிடுறேன், -էառ ." ஆமா தம்பி, அப்பத் தான் மாப்பிள்ளைக்கும் புறப் பட லாயக்குப்படும். அவங்க பலசோலிக்காரங்க பாரு; இல்லியா?" அவள் பேச்சைத் துண்டித்ததுதான் தாமதம். அதே கணம் ஆயா என்ற குரல் கேட்டது. ஏக காலத்தில் சின்னையாவும் அவன் ஆயாளும் பின் திரும்பினர்கள். சிறு குழந்தையின் நிலையில் தன்னை உடந்தையாக்கிச் செருமிக் கொண்டிருந்தாள் வள்ளி. சின்னையா அழைப்பதற்குச் செல்லுவதற்குள் கண்ணிரே அவளை அழைத்துக்கொண்டு வந்துவிட்டது. சின்னையாவின் இதயம் நெக்குவிட்டது. தங்கச்சி, என்ன விசயம்? எதுக்கு இப்படித் தேம்பி அழுகிறே? மச்சான் வரலையாங்காட்டியும்...' என்று கேட் டுக்கொண்டே வந்த சின்னயா டக் கென்று திகைத்து நின்றுவிட்டான். அந்தியில் கண்ட நிலவில் வள்ளியின் சோம்பிய முகத்தில் கைவிரல்கள் ஐந்தும் அப்படியே தடம் பதிந்து வீங்கியிருந்தது தெள்ளத் தெரிந்தது. தைலம்மா உள்ளம் நடுங்கிள்ை. - சின்னயா என்னவோ ஏதோவென்று பதறித் துடித் - தான். - - 'இதெல்லாம் என்ன தங்கச்சி?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/84&oldid=765060" இலிருந்து மீள்விக்கப்பட்டது