பக்கம்:கடல் முத்து.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 கடல் முத்து அதெல்லாம் அவரு-மச்சான் செஞ்ச அநியாய்ம். கண்ணுலம் கட்டி எண்ணி நாலு மாசம் ஆகறதுக்குள்ளே அவருக்கு எம்மேலே வெறுப்பு வந்திடுச்சு. எல்லாம் காரிய மாத்தான்; கண்டிச் சீமையிலேருந்து அது அக்கா மகள் வந்திருக்குதாம், அந்தக் குட்டி மேலே அவரு கண்ணு வைச்சுப்பிட்டாராம், பணக்காரங்களாம்; என்னை விலக்கி வைச்சிட்டு அந்தப் பொண்ணைத்தான் பிறக்கிற மாசம் கண்ணுலம் கட்டிக்கப்போராரும். இனிமே நான் அந்த விட்டுப் பக்கங்கூட அடியெடுத்து வைக்கப்படாதுன்னு அடிச்சுத் துரத்திட்டாரு என்ருள் வள்ளி விம்மிய குர வில், அவள் மார்பகம் விம்மித் தாழ்ந்தது. அவளுடைய நயனச் செம்புகள் நீரைப் பெருக்கின. சற்று முன் தாயும் மகனும் வள்ளியைப்பற்றி எவ் வளவு ஆசையாக நினைத்துத் திருவிழாவிற்கு மாப்பிள்ளை யையும் மகளையும் வரவழைக்கத் திட்டமிட்டிருந்தார்கள். ஆளுல் கடைசியில், ..? அடிச்சுத் துரத்திப்புட்டானு? நன்றிகெட்ட பய மகன். தங்கச்சி, கலங்காதே ஊர் மனுசங்கிட்டச் சொல்லி நியாயம் கேக்கலாம். மாரிப்பயல் வழிக்கு வந்தாத் தப் பிச்சான், இல்லாப்போன அவனே ஒரு கை பார்த்துக் கிறேன். பாவிப் பயல் ஒன்னைக் கை நீட்ட எப்படி மனசு வந்துச்சோ? சின்னேயா இப்படிப் பேசினன். அவன் குரலில், வார்த்தைப் பின்னணியில் சோளம் பொரிந்தது. மாரி இப்படி நடந்துகொள்வான் என்று கிஞ்சித்தும் எதிர்பார்த்தவனல்ல சின்னயா. தன் தங்கையின் நிலை அவனுக்கு ஆத்திரம் உண்டாக்கியது. - - மகளைச் சமாதானப்படுத்தி உள் .ே ள அழைத்துச் சென்ருள் தைலம்மாள். அவள் கண்களில் கண்ணிர் பணித் இருந்தது. காலத்தேருக்கு ஹோல்டான்' போட யாருக்குத் இராணி உண்டு நாட்கள் கடுகிப் பறந்தன. தன் சகோதரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/85&oldid=765061" இலிருந்து மீள்விக்கப்பட்டது