பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73



மாற்றான் பூந்தோட்டத்து
மல்லிகையே ! அறுநான்கு
திங்க ளின்முன்
ஆற்றோரம் உன்காதல்
அரசியலை அடையாளம்
கண்டிருந்தால்
வேற்றொருவன் மார்பிலுனை
விளையாட விட்டிருக்க
மாட்டேன் : என்றன்
நாற்றங்கா லாயுன்னை
நானாக்கி என்னன்பை
நட்டி ருப்பேன்,


கன்னிப்பூ மலர்கின்ற
காடான ஐரோப்பாக்
கண்டத் துக்குள்
என்னழகுத் தேரேறி
இறங்காத இடமில்லை !
துள்ளி ஓடும்
மின்னலையும் வெற்றிகண்டேன்
மேலேறி வானவில்லை
மணந்தேன்; ஆனால்
உன்னழகின் உயரத்தை
ஒருத்தியிடம் இதுவரையில்
கண்ட தில்லை.

க. தி. 6