பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

111


படுத்திச் சிறுசிறு பலகைகள் செய்து நிலத்தில் பதித்துத் தளம் அமைக்கின்றனர். தளங்களில் மட்டுமின்றி, சுவர்களிலும் சிறிது உயரத்திற்கு இப்பலகைகளைப் பதிக்கின்றனர். இத்தள வமைப்பு மிகக் கவர்ச்சியாக இருப்பதோடு, அழுக்குப் படியாமல் தூய்மையாகவும் காட்சி யளிக்கிறது.

பூச்சு முறை: பண்டைக் காலங்களில் தூய்மையின் பொருட்டும், சுகாதாரத்தின் பொருட்டும் சுவர்களுக்குச் சுண்ணாம்பினால் வெள்ளையடிப்பது வழக்கம். இன்று சுவர்களுக்கு வண்ணம் பூசுவது நாகரிகமாகக் கருதப்படுகிறது. சுண்ணப்பூச்சுச் சில திங்கள்களில் உதிர்ந்துவிடும். சுவரில் சாயும் போது கண்ணம் நம்மேல் ஒட்டிக் கொள்ளும். ஒட்டாமலும், விரைவில் அழியாமலும் ஆண்டுக் கணக்கில் இருக்கக் கூடியதான உயர்ந்த வண்ணப் பூச்சுக்கள் (Silvicrete) இப்பொழுது வீடுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.\

இவ்வாறு பல துறைகளிலும் கட்டடக் கலை வியக்கத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. எளிமை, வாழ்க்கை வசதி, சுகாதாரம் ஆகிய மூன்றுமே இன்றைய கட்டடக் கலையின் நோக்கங்களாக இருக்கின்றன.

மேற்படித்த இருபதாம் நூற்றாண்டின் கட்டடக் கலையினை நுகரும் நாம் பண்டைக் கட்டடக் கலையை நோக்குங்கால், நினைவலைகளில் எழும் கதைகளைப் போன்று தோன்றி நம்மை வியப்பிலாழ்த்துகின்றன அல்லவா?