பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

79


குதுப்மினாரைச் சற்றுத் தொலைவிலிருந்து கூர்ந்து நோக்கினால், அது செங்குத்தாக இல்லாமல் சற்றுச் சாய்ந்திருப்பது தென்படும். பலமுறை ஏற்பட்ட நிலநடுக்கங்களே இச் சாய்வுக்குக் காரணம். டில்லியிலுள்ள தொல்பொருள் காப்புத் துறையினர் இதை மிகவும் கண்காணிப்போடு காத்து வருகின்றனர். சிறு விரிசல் ஏற்பட்டால் கூட உடனுக்குடன் அதைப் பழுது பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

குதுப்மினாரின் அருகிற் சென்று பார்த்தோமானால் அல்டமிசின் சமாதியில் காணப்படுவது போன்ற அழகிய சிற்ப ஓவியங்கள் கீழ்மாடிகளின் சுவர்களில் காணப்படுகின்றன. கோபுரச் சுவர்களில் நாற்புறமும் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. அல்டமிசு குதுப்மினாரைக் கட்டி முற்றுப் பெறச் செய்த செய்தியைப் பற்றிய எல்லாக் குறிப்புகளும் அவற்றில் காணப்படுகின்றன. கோபுரம் உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, இதன் சுவர்களை வெளிப்புறத்தில் மிகவும் சரிந்திருக்குமாறு சாய்த்துக் கட்டியிருக்கின்றனர், கோபுரத்தின் உச்சியிலிருந்து ஒருவன் கீழே குதித்தால் அவன் நேராகப் பூமியில் விழமாட்டான்; சுவரிலேயே மோதிக் கொள்வான். தாவிக் குதிப்பதில் மிகவும் வல்லவனா யிருந்தால்கூடச் சுவரில் மோதாமல் கீழே குதிக்க முடியாது.

குதுப்மினாரின் உச்சியை நாம் அடைந்தோமானால் டில்லி நகரின் அழகிய காட்சிகளையெல்லாம் ஒன்று விடாமல் பார்க்கக் கூடும். இவ்வுச்சியை யடைய 378 படிக்கட்டுகளை ஏறியாக