பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒத்த கருத்துடைய ஒப்பிலாச் சான்ருேர் 28

மயக்கம் இவை மூன்றும் நாமம் கெட அந்தணர் என் போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செங்தண்மை பூண்டு ஒழுகலான் வருவிருந்து பார்த்திருப்பான் 'இரு மனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருக்ேகப்பட்டார் தொடர்பு வாழ்நாள்வழி அடைக்கும் கல் தவமும் தவமுடையார்க்கு ஆகும் உரன் என்னும் தோட்டியால் ஒர் ஐந்தும் காப்பான் ஆபயன் குன்றும் தான் அமிழ்தம் என்று உணரல் பாற்று என்று தம் நூலில் கூறியுள்ளார்.

இங்கு எடுத்துப் பேசப்பட்ட இருபெரும் சான் ருேர்கள் மிகமிகப் பேரறிவு படைத்த பெருமக்கள் ஆவர். சிறங்த சித்தர்களும் ஆவர். திருமூலர் 'கம் பிரான் திருமூலன்' என்று சுந்தரராலும், ‘என் உச்சி அடி வைத்தபிரான் மூலனுகின்ற அங்கணனே' என்று கம்பியாண்டார் நம்பிகளாலும், அருள் மூலர் என்று சிவஞான முனிவராலும், 'திருமூல தேவனேயே சிங்தை செய்வார்க்குக் கருமூலம் இல்லேயே காண்’ என்று பெயர் அறிய ஒண்ணு ஒரு பெரியாராலும் போற்றப் பட்ட மாபெரும் புலவர் ஆவார். திருமங்திரத்தின் மாண்பினைப் பற்றிப் பேசவங்த ஒரு பெரியார்,

திருமங் திரமே சிவகதிக்கு வித்தாம் திருமங் திரமே சிவமாம்-அருமந்த புந்திக்கு ளேகினேந்து போற்றுமடி யார் தமக்குச் சந்திக்கும் தற்பரமே தான்.

என்று உண்மை தெரிந்து ஒதியுள்ளார்.

திருவள்ளுவர் பெருமையினேத் திருவள்ளுவமாலை என்னும் நூல் கொண்டு உணர்ந்துகொள்ளலாம்.