64 கட்டுரைக் கொத்து
வந்து அன்னம் இட்டார் என்றும் அன்ருே இவ்வெடுத் துக்காட்டுக் காட்டுகிறது. இதனை மேலு விளக்கும் வார் போல இராமலிங்க அடிகளாரும்,
இன்பாட்டுத் தொழிற்பொதுவில்
இயற்றுகின்ற எம்பெருமான் உன்பாட்டுக் குவப்புறல்போல்
ஊர்ப்பாட்டுக் குவந்திலர்என் றென்பாட்டுக் கிசைப்பினுமென் ?
இடும்பாட்டுக் கரணமெலாம் அன்பாட்டுக் கிசைவதுகாண்
அருட்பாட்டுப் பெருந்தகையே’
என்று மனம் உவந்து பாடியுள்ளார்.
சுந்தரர் பாட்டை எப்பொழுதும் கேட் டு க் கொண்டு இருப்பதற்காகவே இறைவரும் இவரை ஆட் கொள்ளும்போதும்,
மற்று வன்மை பேசி வன்தொண்டன் என்னும் காமம் பெற்றன ; நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க அற்சனை பாட்டே ஆகும்; ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடு கென்ருர் தூமறை பாடும் வாயார்’ என்று கட்டளையிட்டருளினர் போலும் !
இறைவனே விரும்பும் திருப்பாட்டை வன் தொண்டர் பாடும் திறன் பெற்றவராயின், இவரது கல்வி அறிவை நாம் அளங்து கூறமுடியாதன்ருே ?
இவர் கல்வியறிவின் ஆழத்தை நாம் இவர் பாடி யுள்ள பாட்டினின்றும் நன்கு அறியலாம். இவர் பூகோளக்கலே அறிவை நன்கு பெற்றவர் என்பதற்குச்