பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சட்டம் படைக்கும் திருக்கோயில் 247

அடங்கி வாழும் மக்கள் முன்புபோல் விரிவாக இல்லை; பல காடுகள் இந்தப் பார்லிமெண்டில் உருவாகும் சட்டத்துக்கு அடங்கி கடந்த காலம் ஒன்று இருந்தது. பிரிட்டிஷ் சாம் ராஜயத்தில் கதிரவன் மறையாத காலம் அது. இன்ருே? காலம் மாறிவிட்டது. பிரிட்டிஷ் ஆட்சியின் ஆணைப் பரப்புச் சுருங்கிவிட்டது. ஆனலும் அன்று அடித்த மணியையே இன்றும் அந்தப் பெரிய கடிகாரம் கணிர் என்று அடித்து ஒலித்துக்கொண்டிருக்கிறது.