உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணாயிரத்தின் உலகம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

துண்டு

87

எடுத்து வைத்துக் கொண்டு இப்படி மெய்மறந்து கிடக்கறாரு...

கணக்: ஏதோ புத்தகமா! அல்ல, அம்மா! அல்ல, அது தான் புத்தகம்! மற்றதெல்லாம் காகிதக்கட்டு...வெறும் காகிதக்கட்டு நம்ம சின்னவரு எழுதிய புத்தகமம்மா அது...

சுப்பு : (ஆச்சரியப்பட்டு) நம்ம பாரதனா?

கண: ஆமாம்! ஊரே கொண்டாடுதே; எத்தனை பாராட்டுக் கூட்டம்—புகழ்மாலை, சின்னவருக்கு...

சுப்பு: (முகம் மலர்ந்து) என் மகனா! அவ்வளவு கெட்டிக்காரனா பாரதன்; இவ்வளவு பெரிய புத்தகமா எழுதினான். என்ன எழுதி இருக்கிறான்னு சொல்லாம அவர் மட்டும், புள்ளெ எழுதினதைப் படிச்சிப் படிச்சிப் பூரிச்சுப் போறாரு! என்னா எண்ணம் பாரு. ஏன், எனக்குச் சொன்னா என்னவாம்?

[உள்ளே சென்று ராம்லால் எதிரே நின்று செல்லக் கோபத்துடன் குழைவாக]


ஏனுங்க....உங்களைத்தான்...நம்ம பாரதன் எழுதினதாமே...சொல்லக் கூடாதா என்னிடம்?

[ராம்லால் முறைத்துப் பார்க்கிறார். அவர் நிலை புரியாமல் பேசுகிறாள் சுப்புத்தாய்].

சுப்பு: நீங்களே படிச்சிப் படிச்சி ரசிக்கிறிங்களே, கொஞ்சம் உரக்கத்தான் படியுங்களேன். எனக்கு மட்டும் ஆசை இருக்காதா, கேட்க!

ராம்: (கோபமாக) சுப்புத்தாயி! போ வெளியே! நிற்காதே என் எதிரே! படிச்சுக்காட்டவா, படிச்சி, இதை...இதையாடி படிச்சிக் காட்டச் சொல்றே...புத்தகமாடி இது. என் தலைக்குத் தீம்புடி, தீம்பு. போ! கோபத்தைக் கிளறாதே.

[ராம்லாலின் கோபம் கண்டு மனைவி திகைத்து நிற்கிறார். கணக்காளர் கலங்கிப் போகிறார். பல்லைக் கடித்துக் கொண்டு பேசுகிறார் ராம்லால்.]