உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணீர் வியர்வை இரத்தம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலையை எண்ணி நமக்கு நாமே அங்கலாய்த்துக் கொள்ளத்தக்கதான, அந்த அங்கலாய்ப்பின் காரணமாக ஒரு எழுச்சி பெறத்தக்க வகையில் உரையினை இங்சே ஆற்றியிருக்கிறார்கள். நான் இங்கே ஆற்ற எண்ணுகிற உரை, பேராசிரியருடைய உரைக்குப் பிறகு அவர் எந்தச் குறிக்கோள், எந்த லட்சியம், எந்தக் கொள்கை நிறைவேற வேண்டும் என்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா இவர்களெல்லாம் விரும்பினார்களோ அந்தக் கொள்கை குறிக்கோள் வெற்றி பெற இங்கே இந்தப் பொதுக்குழுவிலே அவர் விரிவாகப் பேசிய பிறகு, அந்த கொள்கைகளைப் பற்றிய விளக்கங்களையோ, விரிவுனா களையோ தருவதற்கு நான் விரும்பாமல், அரை நிறைவேற்றுவதற்கான செயல்பாடுகள் என்ன என்பதை இந்தப் பொதுக்குழுவில் கூடியிருக்கின்ற உறுப்பினர்கள், கழகக் கண்மணிகள், உடன் பிறப்புக்கள் எண்ணிப் பார்த்திடவும். அந்த எண்ணங்களை செயல்படுத்திடவும் சிலவற்றை மட்டும் இங்கே நான் சொல்ல விரும்புகின்றேன். அவைகளை ல் பேராசிரியர் இங்கே தமிழினம், தமிழ் உணர்வு, தமிழ் மொழி இவைகளைப் பற்றியெல்லாம் பேசினார். ஆனா இன்றைக்கிருக்கின்ற நிலை என்ன என்பதை ஒரு சி று எடுத்துக்காட்டு மூலமாக சொல்ல விரும்புகிறேன். முரசொலியில் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட பேராசிரியர் இங்கே பேசும்போது முரசொலி பத்திரிகையை பட்டி தொட்டிகளிலெல்லாம் வாங்கிப் படிக்க வேண்டும் என்று சொன்னார். அந்த முரசொலி பத்திரிகை தி.மு.கழகம் லட்சக்கணக்கான உறுப்பினர் களைக் கொண்ட ஒரு பேரியக்கமாக இருந்தாலும் கூட 8