உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணீர் வியர்வை இரத்தம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகெங்கும் உள்ள மக்கள் நாயக இயக்கங்களின் தலைவர்களில் இவர் ஒருவரேதான் என்பது மறக்க என்பது முடியாதது. உள்கட்சி ஜனநாயகத்தில் பண்டித நேருவே கூட நிற்க முடியாத இடத்தில் கலைஞரவர்கள் உயர்ந்து நிற்கிறார். ஜனநாயக வரலாற்றுக்குத் தலைவர் கலைஞர் என்றும் மறக்க முடியாத அருட்கொடை! அந்தப் பெருமைக்குரிய தேர்தல்களை நடத்தி முடித்த பின்னர் கூடிய பொதுக்குழு மீண்டும் டாக்டர் கலைஞரவா களைத் தொடர்ந்து ஏகமனதாக ஆறாவது முறை தலைவராக ஏற்று தன்னை பெருமைப்படுத்திக் கொண்டது. அன்று தலைவரவர்கள் மனம் திறந்து ஆற்றிய உரை இது. நம்மிடம் உள்ள குறைகளைக்கூட மறைக்காமல் அவர் ஆற்றிய சொற்பொழிவில் அண்ணல் காந்தியாரிடம் இருந்தது போன்ற சத்திய ஆவேசத்தைக் கண்டு அனைவரும் மெய்சிலிர்த்தார்கள். தந்தையையும், அண்ணனையும் இழந்த இந்த இயக்கக் குடும்பத்தைப் "பாங்கு" குறையாமல் நடத்தும் தலைவர் கலைஞரின் பேச்சைத் தலைமைக் கழகம் பெருமையுடன் உங்கள் முன் படைக்கின்றது. செல்வேந்திரன் தலைமைக் கழக வெளியீட்டுச் செயலாளர் 2