பக்கம்:கதாநாயகி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மங்கையர்க்கரசிக்கு நல்லமுத வாக்கு கொடுத்தாள் லேடி டாக்டர். அம்பலத்தரசனுக்கு அவ்வாக்கு அமுதாகி இனித்தது. ஆனால், ஏன் அவள் இப்படி அழுகிறாள்? "ஆழாதேம்மா. நீ பிழைச்சிடுவாய்!" என்று ஆறுதல் படுத்தினாள் டாக்டரம்மாள். - "அம்மா, நான் பிழைச்சிடுவேனோ என்கிறத்துக்காகத் தான் அழுகிறேன். அழுகிப்போன உயிர் இது! இது சீக்கிரம் போனால்தான் தேவலாம். கண்கெட்ட பின்னாலே சூரிய நமஸ்காரம் செய்யமுடியுங்களா, அம்மா? "அம்மா, வாழ்க்கைதான் நம்ம கையிலே இருக்கிறதே தவிர, ஜீவன் நம் கையிலே இல்லை. அது ஆண்டவனுக்குச் சொந்தம். உன் நிலையும் சீக்கும் எனக்குப் புரிஞ்சிட்டுது!... நீ பிழைச்சு எழுந்திடுவாய். புதிசாய்ப் பிறந்ததாட்டம் நினைச்சுக்கிட்டு, இனிமே நல்லதனமாய் வாழ்ந்திடு போதும். நடந்ததையெல்லாம் கெட்ட கனவாகவே நினைச்சிடு. அம்பலத்தரசன் உனக்கு ஆதரவு தருவார். அவரை நீ நம்பலாம்!" என்றாள் லேடி டாக்டர் மரகதம் மூர்த்தி. லேடி டாக்டரின் எம். பி. பி. எஸ். படிப்பு, மங்கையர்க்கரசிக்குப் புதுவாழ்வும் புது உயிரும் நல்கிவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அம்பலத்தரசனுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/100&oldid=765975" இலிருந்து மீள்விக்கப்பட்டது