பக்கம்:கதாநாயகி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114*கதாநாயகி



"மனம் இருந்தால் மார்க்கம் இல்லாமலா போயிடும்?"

"உங்க போக்கே எப்பவும் ஒரு தனி டைப் ஆச்சுங்களே, ஸார்?" என்றான் பூமிநாதன்.

இதற்கு விடையாக எதுவும் பேசவில்லை அம்பலத்தரசன். அவன் மனம் தீவிரச் சிந்தனையில் வசப்பட்டிருந்திருக்க வேண்டும்!

தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு, புகையைக் கக்கிக்கொண்டேயிருந்தான் பூமிநாதன்.

தலையை நிமிர்த்திக் கொண்டு, தன் உற்ற நண்பனையே உன்னிப்புடன் ஆராய்ந்து கொண்டிருந்தான் அம்பலத்தரசன். அவனது மனத்தின் ஒரு புறத்தில் ஒதுங்கித் தூங்கிய 'வக்கிர புத்தி, விழித்துக் கொண்டது; இந்தக் காலத்திலே யாரை நம்பமுடிகிறது? கெட்டவர்கள், நல்லவர்களாக வேஷம் போடுகிறார்கள்!... இப்படிப்பட்ட சஸ்பென்ஸ்கள் சினிமாவில் ஏராளம் காட்டப்படவில்லையா? வேஷம் போட்டு நடிப்பதிலே இந்தப் பணக்காரர்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் வேறு யாருக்கும் இருப்பதில்லையே? நேற்றிரவு நான் சந்தித்த கருணாநிதி என்ற ஸ்கூட்டர் ஆசாமி இல்லையா உதாரணத்துக்கு? ஆமாம்... இந்தப் பூமிநாதன் மெய்யாகவே நல்லவன் தானா? அப்படியென்றால் அவனுடைய மார்பில் இருக்கும் ரத்தத் தழும்பு எப்படி வந்தது? ஏன் வந்தது? இந்த விசித்திரமான அவசர யுகத்திலே யாரைத்தான் நம்ப முடிகிறது? இன்றைய விபரீதமான நாகரீகம் தான் எந்த ரெளடிக்கும் போர்வையாக அமைந்துவிடக் காத்திருக்கிறதே? ஆமாம், சற்று முன் வந்த அந்தப் புரட்சித் தம்பதியை நான் எப்படி மறப்பேன்? என்னையும் அவர்கள் இனத்தோடு சேர்த்துக் கருதித்தான் என்னைச் சந்திக்க வந்திருக் வேண்டும்! மலர் விழியைக் கெடுத்த அந்தப் பாவி என்ன ஆனான் என்று கேட்க மறந்துவிட்டேனே...! அதுசரி. என் ஊர்வசியைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/124&oldid=1319035" இலிருந்து மீள்விக்கப்பட்டது