பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

காப்பு

இந்த மூத்த களிறு அந்தத் திருக்கோயிலின் தெற்குப் பக்கத்தில் கருணையாகிற மதம் பொழியவிட்டுக் கொண்டு வீற்றிருக்கிறது. வட பக்கத்திலே இந்தக் களிற்றின் இளைய களிறாகிய முருகன் உட்கார்ந்திருக்கிறான். இந்த முருகப் பெருமானை நான் கண்டு கொண்டேன் என்று முதல் பாட்டிலே அருணகிரிநாதர் சொல்கிறார். விநாயகரை நேர்முகமாகச் சொல்லாமல் முருகனோடு சார்த்திச் சொன்னாலும் இப்பாட்டில் விநாயகருடைய பெருமையே சிறப்பாக நிற்கிறது. ஆகையால், தனியே விநாயகருக்குக் காப்புச் செய்யுள் இல்லாவிட்டாலும் இச்செய்யுளே காப்பைப் போல அமைந்திருக்கிறது.


   அடலரு ணைத்திருக் கோபுரத்
      தேஅந்த வாயிலுக்கு
   வடவரு கிற்சென்று கண்டுகொண்
      டேன்வரு வார்தலையில்
   தடய டெனப்படு குட்டுடன்
      சர்க்கரை மொக்கிய்கைக்
   கடதட கும்பக் களிற்றுக்
      கிளைய களிற்றினையே.

(வீரம் செறிந்த திருவண்ணாமலையில் உள்ள கோயிலில் இருக்கும் திருமகள் விலாசமுள்ள கோபுரத்துக்கு உள் வாசலுக்கு வடபக்கத்திற் சென்று, வருபவர்கள் தலையில் தடபட என்று விழுகின்ற குட்டை ஏற்றுக் கொள்வதோடு சர்க்கரையை உண்ட கைகளுடன் வீற்றிருக்கும், மதம் பிறக்கும் சுவடுகளை உடைய மத்தகத்தைப் பெற்ற யானையாகிய விநாயகருக்கு இளைய யானை போன்ற முருகனைத் தரிசித்துக் கொண்டேன்.

அடல்-வீரம். திரு-திருமகள் விலாசம். அந்த வாயில்-உள்வாயில். அருகு-பக்கம். தடபட என என்றது தடபடென என்று ஆயிற்று: தொகுத்தல் விகாரம். குட்டுடன்-குட்டைப் பெறுவதோடு. மொக்கிய உண்ட. கடம்-மதம். தடம்-மதம் பிறக்கும் இடம். கும்பம்-யானையின் மத்தகம். சென்று களிற்றினைக் கண்டு கொண்டேன் என்று கூட்டுக.)

46