பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிலும் வீடும் இறைவன் திருவருளில் ஈடுபட்டுப் பெறுவதற்கு அரிய பேற்றைப் பெற்ற அருணகிரிநாதர், உலகத்து மயலில் ஆழ்ந் திருக்கும் மக்களும் எவ்வாறு அவன் திருவருளில் ஈடுபட்டு இன்பத்தைப் பெற்று உய்யலாம் என்பதற்கு மிக எளிதான வழி ஒன்றைச் சொன்னார். அதனைச் சென்ற பாட்டில் பார்த்தோம். பொறி இன்பம் நிலை அன்று "இந்த உடம்போடு வாழும் வாழ்க்கை பிரத்தியட்சமாக இன்பத்தைத் தருவதாக இருக்கிறதே! இப்போது அநுபவிக்கும் இன்பத்தைக் காட்டிலும், எம்பெருமான் திருவருள் சித்திப்பத னால் பேரின்பம் உண்டாகும் என்பது மெய்யென்றால், இதை விட்டு அதைப் பெறுவதற்குச் செய்கின்ற முயற்சி வீண் அன்று. ஆனால் அது உண்மை என்பதற்கு என்ன ஆதாரம்? கண்ணால் பார்த்து அநுபவிக்கிற இன்டத்தை விட்டு விட்டுக் கண்ணாலே காண முடியாத ஒன்றை அடைய ஏன் முயற்சி செய்யவேண்டும்?" என்ற கேள்வி பலரிடத்தில் உதிக்கும். அத்தகைய கேள்வி உடம்பில் முறுக்கு இருக்கும் வரையில்தான் எழும். உலகத்தில் பல காலம் வாழ்ந்தாலும் சில காலந்தான் இந்திரியங்களின் வாயிலாகச் சுகத்தை அநுபவிக்க முடியும். குழந்தைகளாக இருக்கும் பருவத்தில் இன்ப துன்பப் பதிவு கள் ஏற்படுவது இல்லை. வயசு மிகுதியாகி முதுமையை அடைந்த வர்களுக்கு ஆசை இருந்தாலும் அநுபவிக்க முடியாத நிலைமை உண்டாகி விடும். உடம்பைச் சுமப்பதே அவர்களுக்கு வெறுப்பை அளிக்கும். முதுமை முதிரமுதிர உடம்பு கைவிட்டுக் கொண்டே வரும். முதுமையும் தளர்ச்சியும் மரணம் அடையும்போது உடம்பு பயன்படாமற் போகிறது என்பது இருக்கட்டும். வாழும்போதே நம் உறுப்புகள் ஒவ்வொன்