பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுக அமுதம் சாவாத நிலை தந்தான். அதனால் அந்தத் திருவுருவத்தை அமுதம் என்று சொன்னார். தித்தித்திருக்கும் அமுது கண்டேன். அமுதம் என்பது மரணத்தை ஒழிப்பது. முன்னாலே சொன்னது போல தேவர்கள் உண்ட அமுதம் போன்றது அன்று இது. எந்தக் காலத்திலும் மாறாத இன்பத்தைத் தந்து, இனிப் பிறவி மரணம் ஆகிய இரண்டும் வராமல் செய்கின்ற அரு மருந்து, இனிய மருந்து இது. தேனும் அமுதமும் தேன் ஊற்றாகத் தோன்றிப் பின்பு கடலாக மாறி அந்தத் தேன் கடலில் அமுதம் எழுந்ததாய்ச் சொல்கிறார். இனியது என்று சொல்லவேண்டுமானால் அதனைத் தேன் என்று சொல்வது ஒரு வாய்பாடு. பாட்டு இனிமையாக இருந்தது என்பதை உணர்த்த, தேன்போல இருந்தது என்று சொல்வது வழக்கம். மருந்துக்குத் தேன் இல்லை என்று யாராவது சொன்னால் அந்தப் பாட்டைக் கொண்டு வந்து இழையுங்கள் என்றா சொல்வது? அமுதம் என்பதும் அப்படித்தான். தேனைவிடச் சிறந்தது அமுதம். புத்திக் கமலத்தில் உருகி ஊற்றானபோது தேனாக இருந்தது. அந்த ஊற்றுக் கடலானபோது அதில் அமுது விளைந்தது. அநுபவ நிலையிலிருந்து இறங்கி வந்துள்ள அருணகிரிநாதர் சொல் இறந்த இன்பத்தைச் சொல்லுக்குள்ளாக்கிச் சொல்கிறார். அப்படிச் சொல்கிறவர் கேட்கிறவர்களுக்கு விளங்கும் வண்ணம் சொல்லவேண்டும். விளக்க முடியாததை விளங்கும் வண்ணம் சொல்ல வேண்டுமானால் அதற்குச் சில உத்திகள் உண்டு. அமுதம் என்று சொல்வது அத்தகையது; உயிருக்கே இனிமை தருகின்ற, மரணத்தை மாற்றுகின்ற பொருள் அது என்று சொல்வதற்குப் பதிலாக அது தித்திக்கின்ற அமுதம் என்று சொன்னார். தித்திப்பு என்பது நாவின் சுவை. இங்கே மனம் கடந்த நிலையில் உள்ள இன்ப நிலையைச் சொல்லும்போது அப்படிச் சொல்லலாமா என்று கேட்கக்கூடாது. அப்படிச் சொல் வதனால் சொன்னவர் கருத்தை நாம் ஒருவாறு உணர்ந்து கொள் கிறோம். நம்முடைய மொழியில் சொன்னால்தான் விளங்கும் என்பதற்காக அப்படிச் சொல்கிறார். 3O3