பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்டும் மலரும் ஆண்டவன் என்னைத் திருத்துவதற்கு ஒரு வழி வைத்திருப்பான். அதை அவனுடைய திருவுள்ளத்திற்கு விட்டுவிட வேண்டும்’ என்ற நினைவு பிறகு வந்தது. 'முருகா, என்னைத் திருத்துவதற்கு என்ன வழி நீ நினைத்திருக்கிறாய்?" என்று கேட்கிறார். குவடு தவிடுபடக் குத்திய காங்கேயனே வினையேற்கு என் குறித்தனையே? இறைவனிடம் இன்னது வேண்டுமென்று அறிவிக்கும் இயல்பு பக்தர்களுக்கு இல்லை; 'எனக்கு இன்னது வேண்டு மென்பது உனக்கே தெரியும். நீ என்ன செய்கிறாயோ அதுவே எனக்கு இன்பம்' என்பது அவர்களது மனோபாவம். ‘'வேண்டத் தக்கது அறிவோய்நீ” என்று மணிவாசகப் பெருமான் பேசுகின்றார். 'கேளாமல் கொடுக் கின்ற பெரும் கொடையாளன் முருகன். அத்தகைய பெருமானிடம் நீ இது செய் என்று நான் சொல்வது மிகை. அவனுடைய திரு வுள்ளம் ஏதோ என்று அருணகிரிநாதர் எண்ணுகிறார். 'முருகா, நீ மலை தவிடு படும்படி குத்திய பெரிய வீரன். கங்கையின் மகன். அடியார்களை இன்னபடி ஆட்கொள்ள வேண்டும் என்று நீ திருவுள்ளத்தில் கொண்டிருப்பாய். அந்த வகையில் அடியேனுக்கும் ஒரு வழி வைத்திருப்பாய். உன் திருவுள்ளம் யாதென்று அறியேன். நீ என்ன எண்ணி இருக்கிறாய்? நான் என்னுடைய முயற்சியினால் நன்மை பெற வேண்டுமென்பது தெரியாமல் அலைகிறேன். என்னுடைய அறிவை அது போகிற போக்கில் விடாமல் மாற்றி, உன்னுடைய திருவடி மலரில் புகுத்தி அன்பு மயமாக்கி அதனால் முத்தியைப் பெறுவதற்கு உரிய வழியை நான் தெரிந்து கொள்ளவில்லை. நான் செய்கிற பிழைக்குத் தண்டனையாக உன்னுடைய வேலை நீ பிரயோகம் பண்ணவேண்டுமென்று கேட்கத் தோன்றுகிறது. ஆனால் அது முறை அன்று. மிக்க பழைய சூரன் நடுங்கும்படியாக விட்ட வேல் அது. அத்தகைய வேலுக்குத் தக்க இலக்கு அன்று இது. அதனை வாங்க இது தகுதி ஆகுமா? உன் திருவுள்ளம் யாதோ அதன்படி நடக்கட்டும்" என்று அருணகிரிநாதர் இந்தப் பாட்டில் விண்ணப்பித்துக் கொள்கிறார். ★ 331