பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறுதற்கரிய பிறவி 1 உயிர்களிடத்தில் இரக்கம் இல்லாமல் தம்முடைய பாட்டைப் பார்த்துக் கொண்டு போகிறவர்கள் வெறும் வாய் வேதாந்தம் பேசிப் பயன் இல்லை என்பதைப் போன பாட்டில் பார்த்தோம். இந்தப் பிறவியினாலே பெறுவதற்குரிய உறுதிப் பொருள் அறம், பொருள், இன்பம் வீடு என்று சொல்வார்கள். அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றுமே வீட்டை அடைவதற்குரிய கருவிகளாக இருக்க வேண்டும். அந்த வகையில் சென்ற பாட்டில் அறத்தைப் பற்றிச் சொன்னார். இப்போது இறைவனுடைய திருவடியைப் பணியும் அன்பைப் பற்றிச் சொல்லப் போகிறார். முதலில், இந்தப் பிறவி பெறுவதற்கு அரியது என்று சொல்கிறார். இம்மையும் மறுமையும் பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும். 'அரிது அரிது மானிடர் ஆதல் அரிது’ என்று ஒளவைப் பாட்டி சொன்னாள். மற்றப் பிறவிகளைக் காட்டிலும் மனிதப் பிறவிக்கு இரண்டு வகையில் நலம் உண்டு. ஒன்று, பகுத்தறிவு என்னும் உயர்ந்த இலக்கணம் மனிதனுக்கு இருக்கிறது; மற் றொன்று, உலகத்தில் உள்ள விலங்கினங்களையும், பஞ்ச பூதங் களையும் தன் மனம் போனபடி அடக்கி ஆளும் ஆற்றலை அவன் பெற்றிருக்கிறான். அவன் தான் என்ன நினைத்தாலும் அதற்கு ஏற்றபடி வேலைகளைச் செய்யும் வசதி உள்ளவன். மனிதன் இம்மை உலகத்தில் எல்லா வகை இன்பங்களும் பெற்று, மறு உலகத்தில் மோட்சத்தை அடையவேண்டும். இம்மை உலக வாழ்வுக்கு வேண்டிய பொருள்களைப் பிறநாட்டு வாழ் விலே பார்க்கலாம். அமெரிக்காவில் பிறந்திருந்தால் இந்திரிய