பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 பலபடியாக விளையாடலைச் செய்தாலும், எந்த உயிருக்கும் துன்பமே உண்டாகவில்லையாம். "குலகிரி அனைத்தும் ஓர்பாற் கூட்டிடும் அவற்றைப் பின்னர்த் தலைதடு மாற்ற மாகத் தரையிடை நிறுவும் எல்லா அலைகடல் தமையும் ஒன்றா ஆக்குறும் ஆழி வெற்பைப் பிலனுற அழுத்தும் கங்கைப் பெருநதி அடைக்கும் மன்னோ." "இருள்கெழு பிலத்துள் வைகும் எண்டொகைப் பணியும் பற்றிப் பொருள்கெழு மேரு ஆதி அடுக்கலிற் பூட்டி வீக்கி அருள்கெழு குமர வள்ளல் ஆவிகட் கூறின் றாக உருள்கெழு சிறுதே ராக்கொண் டொல்லென உருட்டிச் செல்லும்: என்று இத்தகைய விளையாடல்களைக் கச்சியப்ப சிவாசாரியார் கந்தபுராணத்தில் வருணித்துச் செல்கிறார். நம்முடைய பிள்ளை கள் பிறந்தவுடன் வீதியில் ஓடுவதற்குக்கூட ஆற்றல் இல்லாமல் இருக்கிறார்கள். வீதியில் காரின் குழல் ஊதினால் பயந்து ஓடி வருகிறார்கள். சூரபன்மாவைக் குலத்தோடு அழிக்க வந்த பெரு வீரனாகிய இந்தப் பிள்ளை விளையாடும்போதே வேலை எடுத்து விளையாடியது. அந்த வேல் அசுரர்களையும் அஞ்ஞானத்தையும் அழிக்கும் ஆயுதம். -- வேலெடுத்துத் திண்கிரி சிந்த விளையாடும் பிள்ளை. மலைகள் எளிதில் அசையாதவை. அதனால் அவற்றுக்கு அசலம் என்ற பெயர் உண்டாயிற்று. துளங்காமல் நிற்கும் மலைகளும் முருகப்பெருமான் பூமி அதிரும்படி விளையாடிய போது துளங்கின; சிந்தின. உலகத்திற்கு எல்லையாக ஒவ்வொரு திக்கிலும் ஒவ்வொரு மலை இருக்கிறது என்று சொல்வது மரபு. ஆண்டவன் அந்த எல்லையைக் குலைக்கிறான். அவன் விளையாடல் உலகத்தின் எல்லைக்கும் மேல் போய்விடுகிறது. அவன் விளையாட்டு இட எல்லையைத் தகர்ப்பது என்ற கருத்தையே இது காட்டுகிறது. உயிர்களுக்கு ஊறு ஏற்படாமல் அவன் விளையாடினான் என்பதை நாம் நினைக்கும்படியாகச் சொல்கிறார் கச்சியப்ப சிவாசாரியார். உலகம் என்பது மயக்கம் நிறைந்தது. பிரபஞ்ச வாசனை ஒருவனுக்கு அமைந்தால் அவன் மேன்மேலும் துன்பத்தை 2iO