பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 அந்தப் பெண் அவனை நோக்கி மெல்லப் பேசத் தொடங்கி னாள். அவள் பேச்சு உள்ளன்புடைய பேச்சல்ல. பொருளில் நாட்டம் உடைய பேச்சு; வஞ்சகமான நஞ்சுப் பேச்சு தோதகச் சொல். தோதகம் - வஞ்சகம். அதைக் கேட்டு இளைஞன் மயங்கிப் போனான். - முதலில் அவளைப் பார்த்தான். தொடர்ந்து அவள் வாயைக் கண்டு மயங்கினான். இப்போது வாய்ச் சொல்லால் மயங்கி நிற்கிறான். அந்தச் சொல்லோடு நிற்கவில்லை. அவள் மயக்கும் தந்திரத்தில் வல்லவள். பேச்சில் இனிமை காட்டியதோடு புன்முறுவல் வேறு பூக்கிறாள். அது அவனை வலைபோட்டுச் சிக்க வைக்கிறது. அந்தப் புன்னகை முத்துவரிசை போலத் தோன்றி எத்தனையோ பொருளை அவனுக்குத் தெரிவிக்கிறது. அவள் பேசின பேச்சைவிட அந்தப் புன்னகையால் உண்டாகும். மயக்கம் மிகுதி. வலை சுருங்கிக் கிடந்தாலும் விரிக்கும்போது பெரிதாக விரிவது போல அவள் முறுவல் இருக்கிறது. பலபல சொற்களால் பேசுபவற்றை எல்லாம் சிறிய புன்முறுவலால் அவள் சாதித்துக் கொண்டாள். தோதகச் சொல்லைவிட அந்த வித்தார மூரல் அவனுக்கு நல்லது போலத் தோன்றுகிறது. அப்பால் அவளை மறக்க முடியுமா? வள்ளையைப் போன்ற காதுகளையும், கெண்டையைப் போன்ற கண்களையும், கோவைப் பழம் போன்ற வாய் இதழ்களையும், உள்ளத்தை மயக்கும் சொற்களையும், நித்தில வித்தாரப் புன்முறு வலையும் எண்ணி எண்ணி ஏங்குகிறான். அவனுடைய நெஞ்சம் அலைகடல் பட்ட துரும்புபோலத் துள்ளித் துள்ளி யாடுகிறது. கண்ணும் கருத்தும் மயலிலே உழன்று அமைதியை இழந்து வாழ்வையெல்லாம் வீணாக்கிக் கொள்ளும் முயற்சியிலே தலைப் படச் செய்கிறது. இதற்குத்தானா அவன் கண் பெற்றான்? இதற்குத் தானா அவன் கருத்துப் பெற்றான்? அந்த நிலையில் இருக்கும் இளைஞன் தன் நெஞ்சைப் பார்த்துச் சொல்வது போல அருண கிரியார் பாடுகிறார். சிறு வள்ளைதள்ளித் துள்ளிய கெண்டையைத் தொண்டையைத் தோதகச் சொல்லை நல்ல - வெள்ளிய நித்தில வித்தர மூரலை வேட்ட நெஞ்சே! 223