பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல வேட்கை நெஞ்சு கேட்கிறது; கண்ணாலே கண்டு, காதாலே கேட்ட வற்றை விரும்பாமல் வேறு என்ன செய்வது?" என்று கேட்கிறது. விரும்புவதற்கு உரியது "露 விரும்புவதற்குரிய வேறு பொருள் ஒன்று உண்டு. முருகப் பெருமானுடைய திருவடி அல்லவா உன் விருப்பத்துக்குரியது?" என்கிறார் அருணகிரியார். 'அவனை நான் பார்க்கவில்லையே; அந்தத் திருவடி எப்படி இருக்கிறதென்று கண்டால் அல்லவா அவன்பால் ஆசை உண் டாகும்?' என்று நெஞ்சு சொல்கிறது. காணாத பொருளிடத்திலும் ஆசை செலுத்தும் பண்பு உனக்கு உண்டே. எத்தனையோ பொருள்களிடம் கேட்ட மாத் திரத்தில் நீ ஆசை கொள்கிறாயே!” என்று அருணகிரியார் சொல் கிறார். மனம் கண்ட பொருளை மாத்திரம் எண்ணும் என்பது இல்லை. காதினாலே கேட்ட பொருளையும் எண்ணி ஆசைப்படுவது அதற்கு இயல்பு. இராவணன் முதலில் சீதையைக் காணவில்லை. சூர்ப்பனகை சீதையினுடைய அழகைப் பலபடியாக அவனுக்கு வருணித்துச் சொன்னாள். அவள் வருணித்ததைக் கேட்டுச் சீதையிடத்தில் ஆசை கொண்டான் அவன். காதினாலே கேட்ட பொருளின் மேல் ஆசை கொள்வதும் மனத்திற்கு இயல்புதான். அந்த வகையில் முருகப் பெருமானுடைய திருவடியைக் கண் ணாலே காணாமல் இருந்தாலும், அது மிகச் சிறந்த நன்மையைத் தருவது, இன்பத்தை உண்டாக்குவது என்பதைப் பல பெரியார் கள் சொல்லியிருக்கிறார்கள். அவனுடைய பெருமையையும் பலவாறாக நாம் கேட்டிருக்கிறோம். ஆகவே, 'காதினாலே கேட்ட அந்தப் பொருளிடத்தில் வேட்கையை உண்டாக்கிக் கொள் என்று அருணகிரியார் அந்தத் திருவடியை உடையவனைப் பற்றி விரிவாகச் சொல்லத் தொடங்கினார். தடுத்தாட் கொள்பவன் முருகப்பெருமான் கருணையில் சிறந்தவன். அவன் பரம கருணாநிதி. அவனைச் சார்ந்து நலம் பெறுவதற்கு ஆன்மாக்கள் க.சொ.VI.15 229